பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஏ.சி.சண்முகம் நினைவு பரிசு வழங்கினார். உடன் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே, முன்னாள் நீதிபதிகள் வள்ளிநாயகம், ஜோதிமணி, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்க வேந்தர் பாரிவேந்தர், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன், முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன், நடிகர் கே.பாக்யராஜ், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் சொக்கலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

 
தமிழகம்

“இந்திய கலாச்சாரத்துக்கு அடித்தளமே தமிழகம்தான்” - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், 2 நாள் பயண​மாக நேற்று சென்னை வந்​தார். விமான நிலை​யத்​தில் அவருக்கு உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன், தமிழக அரசு சார்​பில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்​டோர் அவரை வரவேற்​றனர்.

பாரத ரத்னா டாக்​டர் எம்​ஜிஆர் அறக்​கட்​டளை சார்​பில் கலை​வாணர் அரங்​கில் நேற்று மாலை சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடை​பெற்​றது. முன்​னாள் அமைச்​சர் ஹெச்​.​வி. ஹண்டே தலை​மை​யில் நடை​பெற்ற விழா​வில் அறக்​கட்​டளை​யின் நிர்​வாக அறங்​காவலர் ஏ.சி.சண்​முகம் வரவேற்​புரை ஆற்​றி, சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு நினை​வுப் பரிசு வழங்​கி​னார். மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன் பாராட்​டுரை வழங்​கி​னார்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், வேல்ஸ் பல்​கலைக்​கழக வேந்​தர் ஐசரி கணேஷ், டாக்​டர் எம்​ஜிஆர் பல்​கலை. முன்​னாள் துணை வேந்​தர் சுதா சேஷய்​யன், முன்​னாள் நீதிப​தி​கள் டி.என்​.வள்​ளி​நாயகம், ஜோதி​மணி, ஏசிஎஸ் கல்வி குழும தலை​வர் ஏசிஎஸ் அருண்​கு​மார், இதய அறுவை சிகிச்சை நிபுணர் வி.சொக்​கலிங்​கம், திரைப்பட இயக்​குநர் பாக்​ய​ராஜ் ஆகியோர் வாழ்த்​திப் பேசினர்.

விழா​வில் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பேசி​ய​தாவது: ஒட்​டுமொத்த சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தையே எம்​ஜிஆருக்கு தந்த பிறகும், எம்​ஜிஆருக்கு சிலை வைக்க இடம் வேண்​டும் என ஏ.சி.சண்​முகம் கேட்​கிறார். நிச்​சய​மாக அதை ரயில்வே அமைச்​சரிடம் எடுத்​துரைப்​பேன். இன்​றைக்கு பிரதமர் மோடி எங்கே சென்​றாலும் தமிழின் பெரு​மை​யை, தமிழனின் பெரு​மையை உயர்த்​திப் பேசுகிறார்.

மகாத்மா காந்​தி​யிடம் அடுத்த பிற​வி​யில் எங்கே பிறக்க விரும்​பு​கிறீர்​கள் என்று கேட்​டதுக்​கு, ‘நான் தமிழகத்​தில் பிறக்க விரும்​பு​கிறேன்.” என்று சொன்​னார். அதே​போல் தான் பிரதமர் மோடி​யும் “எனக்கு தமிழ் தெரிய​வில்​லை. மீண்​டும் எனக்கு ஒரு பிறப்பு இருக்​கும் என்று சொன்​னால், தமிழ் மண்​ணிலே தமிழ​னாக பிறக்க வேண்​டும்” என்​றார்.

இந்​திய கலாச்​சா​ரத்​துக்கு அடித்​தள​மாக ஒரு கலாச்​சா​ரம் இருக்​கிறது என்​றால் அது தமிழகத்​தின் கலாச்​சா​ரம்​தான். ஒட்​டுமொத்த இந்​தி​யா​வுக்​கும் அது​தான் அடித்​தளம். உலகம் ஒன்​று​தான் என்று முதன்​முதலாக சொன்​னவர் கார்ல் மார்க்ஸ் என கரு​தி​வி​டாதீர்​கள். அதற்கு பல ஆயிரம் ஆண்​டு​களுக்கு முன்பே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று தமிழ் புல​வர் சொல்​லி​யிருக்​கிறார்.

புதிய நாடாளு​மன்​றத்​தில் சோழர்​களின் செங்​கோலை நிறு​வி, தமிழர்​களின் பெரு​மையை உலகறிய செய்​தார் பிரதமர் மோடி. இன்று உலகம் முழு​வதும் பாரதத்தை உற்று நோக்​கு​கிறது என்​றால், இத்​தனை மொழிகளுக்கு மத்​தி​யிலும் ஒற்​றுமை​யாக ஒரு நாடு இருக்க முடி​யும் என்​பதை உணர்ந்த காரணத்​தால்​தான்.

வடக்கே தோன்​றிய சமணம் தமிழகத்தை ஆக்​கிரமித்​துக் கொண்​டிருந்​தது வரலாறு. தமிழ் மொழி பேசுகின்ற 40 ஆயிரம் சமணர்​கள் தமிழகத்​தில் வாழ்ந்து வரு​கின்​றனர். எந்த சமூகத்தை சார்ந்​தவ​ராக இருந்​தா​லும், எந்த மொழியை பேசி​னாலும் பாரத தேசம் என்று வரும்​போது ஒற்​றுமை​யுடன் நிற்​கிறோம்.

பாரத தேசம் வலிமை அடைய வேண்​டும் என்​பது ஏதோ, உலகத்​தில் இருக்​கிற நாடு​களை எல்​லாம் அச்​சுறுத்​து​வதற்​காக அல்ல. இனி ஒரு​முறை உலகத்​தில் எந்த நாடும் பாரத தேசத்தை அச்​சுறுத்​து​வதற்கு கனவிலும் நினைக்​கக்​கூ​டாது என்​ப​தற்​குத்​தான். பிரதமர் மோடி​யின் தலை​மை​யில் பொருளா​தா​ரத்​தில் 5-வது இடத்தை தொட்​டோம், இன்​றைக்கு 4-வது இடத்​தில் இருக்​கிறோம்.

விரை​வில் 3-வது இடத்தை தொடப்​போகிறோம். 2047-ல் நாம் நிச்​சய​மாக உலகத்​தின் முதல் இடத்தை தொட்டே தீரு​வோம். இவ்​வாறு அவர் பேசி​னார். இவ்​விழாவை தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளி​கை​யில், சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு ஆளுநர் ஆர்​.என்.​ரவி விருந்து அளித்​தார். இதில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி உட்​பட தேசி​ய ஜனநாயக கூட்​ட​ணி​யில்​ உள்​ள கட்​சிகளின்​ தலைவர்​கள்​ பங்​கேற்​றனர்.

SCROLL FOR NEXT