தமிழகம்

பாக் நீரிணை கடலை நீந்தி கடந்து பெங்களூரு ஐடி தம்பதி சாதனை

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: தலைமன்​னார் - தனுஷ்கோடி இடையே​யான பாக் நீரிணை கடல் பகு​தியை 10 மணி 45 நிமிடங்​களில் நீந்தி கடந்து பெங்​களூருவை சேர்ந்த தம்​பதி சாதனை படைத்​தனர்.

கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வைச் சேர்ந்த தானிஸ் அப்டி (30), அவரது மனைவி விஷாலி பிரசித் (30). இரு​வரும் தகவல் தொழில்​நுட்ப பொறி​யாளர்​களாக பணிபுரி​கின்​றனர். பெங்​களூரு அகாட​மி​யில் நீச்​சல் பயிற்சி பெற்று பல போட்​டி களில் வெற்றி பெற்​றுள்​ளனர்.

இரு​வரும் இலங்​கை​யில் உள்ள தலைமன்​னாரில் இருந்து இந்​தி​யா​வில் உள்ள தனுஷ்கோடி வரையி​லான பாக் நீரிணை கடல் பகு​தியை நீந்தி கடப்​ப​தற்​காக இந்​திய வெளி​யுறவுத்​துறை, இலங்கை தூதரகம் மற்​றும் பாது​காப்​புத்துறை அமைச்​சகத்​திடம் அனுமதி பெற்​றனர்.

இதையடுத்​து, ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​தில் இருந்து 2 விசைப்​படகு​களில் பயிற்​சி​யாளர், மருத்​து​வர், மீனவர்​கள் உள்​ளிட்ட 20 பேர் கொண்ட குழு​வினருடன் தலைமன்​னாருக்கு புறப்​பட்​டுச் சென்​றனர்.

தலைமன்​னாரில் கடந்த புதன்​கிழமை அதி​காலை 4.30 மணிக்கு நீந்த தொடங்​கிய தானிஸ் அப்​டி, விஷாலி பிரசித் பிற்​பகல் 3.15 மணி​யள​வில் தனுஷ்கோடி அரிச்​சல்​முனையை வந்​தடைந்​தனர். பாக் நீரிணை கடல் பகு​தியை 10 மணி நேரம் 45 நிமிடங்​களில் நீந்தி கடந்த முதல் தம்​பதி என்ற சாதனையை படைத்​துள்​ளனர். இரு​வருக்​கும் மரைன் மற்​றும் பாது​காப்பு படை அதி​காரி​கள் உற்​சாக வரவேற்பு அளித்து வாழ்த்து தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT