தமிழகம்

இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு பி.சி. சான்றிதழ்: மேல்​முறை​யீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தூத்​துக்​குடி, தெற்கு இலந்​தை குளத்​தைச் சேர்ந்த பரமசிவம் என்​பவர் கடந்த 2015-ல் இஸ்​லாமிய மதத்​துக்கு மாறி தனது பெயரை சமீர் அகமது என மாற்றிக் கொண்​டார். இதையடுத்து, தனக்கு ‘முஸ்​லிம் லெப்​பை’ என சான்றிதழ் கேட்டு விண்​ணப்பித்தார். ஆனால், விண்​ணப்பம் நிராகரிக்​கப்​பட்​ட​தால் பரமசிவம், சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் மனு தாக்கல் செய்​தார்.

மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், சாதிச் சான்​றிதழ் குறித்து 2024-ல் தமிழக அரசு பிறப்​பித்த அரசாணை, அரசியலமைப்​புச் சட்​டத்​துக்கு முரணானது எனக்​கூறி அரசாணையை ரத்து செய்ததோடு, அவர் ‘பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த முஸ்லிம்’ என சாதிச் சான்​றிதழ் கோர முடி​யாது எனவும் உத்தரவிட்​டது.

இந்த உத்​தர​வுக்கு எதி​ராக, உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு மேல்முறை​யீடு செய்தது. உச்ச நீதி​மன்​ற நீதிப​தி​கள் பிர​சாந்த் குமார் உள்ளிட்டோர் அடங்​கிய அமர்வு முன்பு மனு விசாரணைக்கு வந்​தது.

தமிழக அரசு சார்​பாக, மூத்த வழக்​கறிஞர்​கள் முகுல் ரோத்​தஹி, சித்​தார்த் லூத்ரா ஆஜராகி, சமூக, கல்வி ரீதி​யாக​ பின்​தங்​கிய சமூகங்​களைச் சேர்ந்​தவர்​கள், மதம் மாறி​னாலும் இட ஒதுக்கீட்டுப்பலன்​களைப் பாது​காத்து அனை​வருக்​கும் சமமான வாய்ப்பை உரு​வாக்​கு​வதுமே அரசாணை​யின் நோக்​கம் என தெரிவித்​தனர். இதையடுத்து நீதிப​தி​கள், தமிழக அரசின் மேல்​முறை​யீட்​டு மனு மீதான தீர்ப்​பை தேதி குறிப்​பி​டா​மல்​ ஒத்​தி வைத்தனர்​.

SCROLL FOR NEXT