மதுரை: திமுகவிலிருந்து விலகி சசிகலாவின் அஇபுமமுகவில் சேர்ந்த உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ அய்யப்பன் ஒரே இரவில் உசிலம்பட்டி வேட்பாளரானார். அவர் இபிஎஸ், ஓபிஎஸ், ஸ்டாலினை அடுத்து தற்போது சசிகலா கட்சியில் சேர்ந்தார்.
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கொக்குளத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன். உசிலம்பட்டி தொகுதி வேட்பாளராக்கி 2021-ல் வெற்றிபெறச் செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
பின்னர், அதிமுகவில் பழனிசாமி அணி, ஓபிஎஸ் அணி என பிளவுபட்டபோது, ஓபிஎஸ் பக்கம் சென்றார். பின்னர் கடந்த பிப்.27-ல் ஓபிஎஸ் தலைமையில் திமுகவில் இணைந்தார்.
இதனால் மீண்டும் தனக்கு திமுகவில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால் ஏமாற்றமடைந்த அய்யப்பன், நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் சசிகலாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவரை உடனடியாகஉசிலம்பட்டி தொகுதி வேட்பாளராக சசிகலா அறிவித்தார்.