சென்னை: தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில் மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் போக்குவரத்து துறை மானிய கோரிக்கையின் போது, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை திருத்தியமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டுமே அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழக அரசு உடனடியாக ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்து உயர்த்தி அறிவிக்க வலியுறுத்தி வரும் 19-ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணியளவில், எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அனைத்து ஆட்டோ தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.