உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ள அஸ்ரா கார்க்.

 
தமிழகம்

உளவுத் துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காவல் துறை​யின் உளவுத்​துறை ஐ.ஜி.​யாக அஸ்ரா கார்க் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டு, தவெக தலை​வர் விஜய் முதல்​வ​ராக கடந்த 10-ம் தேதி பொறுப்​பேற்​றுக் கொண்​டார்.

இதையடுத்து ஐஏஎஸ் அதி​காரி​கள் மட்​டத்​தில் பல்​வேறு மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டன. குறிப்​பாக 4 ஐஏஎஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டனர். இதன் தொடர்ச்​சி​யாக ஐபிஎஸ் அதி​காரி​கள் மட்​டத்​தி​லும் மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டன.

முதல் கட்​ட​மாக, காவல் துறை வடக்கு மண்டல ஐ.ஜி.​யாக இருந்த அஸ்ரா கார்க் உளவுத்​துறை ஐ.ஜி.​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இதற்​கான உத்​தரவை உள்​துறை செயலர் கே.மணி​வாசன் நேற்று பிறப்​பித்​தார்.

முன்​ன​தாக தமிழகத்​தில் தேர்​தல் அறிவிக்​கப்​பட்ட பிறகு உளவுத்​துறை ஐஜி.யாக அவி​னாஷ் குமார் நியமனம் செய்​யப்​பட்​டிருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. நேர்மை மற்​றும் கண்​டிப்​புக்கு பெயர் பெற்ற அஸ்ரா கார்க், பஞ்​சாப் மாநிலம் பாட்​டி​யாலா​வைச் சேர்ந்​தவர்.

2004-ல் நேரடி ஐபிஎஸ் ஆக தேர்​வான இவர் தமிழகப் பிரிவு அதி​காரி​யாக பணி​யமர்த்​தப்​பட்​டார். பி.இ. பட்​டம் பெற்​றுள்ள அஸ்ரா கார்க் தமிழ், பஞ்​சாபி, இந்​தி, ஆங்​கிலத்​தில் சரள​மாக பேசக்​கூடிய​வர்.

வேலூர் மாவட்​டம் திருப்​பத்​தூரில் உதவி எஸ்​.பி.யாக பணி​யைத் தொடங்கி நெல்​லை, மதுரை, தரு​மபுரி மாவட்ட எஸ்​பி​யாக பணி​யாற்றி மக்​களுக்கு ஆதர​வாக பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்​டார். பின்​னர் பதவி உயர்வு பெற்று டெல்லி சிபிஐயில் பணி​யாற்​றி​னார்.

அதைத் தொடர்ந்து மீண்​டும் தமிழகம் திரும்​பிய அவர் தென்​மண்டல ஐ.ஜி.​யாக நியமிக்​கப்​பட்​டார். பின்​னர் வட சென்னை காவல் கூடு​தல் ஆணை​ய​ராகப் பணி​யாற்​றி​னார்.

அதைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி.​யாக பணி​யாற்​றிய நிலை​யில் தற்​போது உளவுத்​துறை ஐ.ஜி. ஆகி​யுள்​ளார். தென் மண்டல ஐ.ஜி.​யாக அஸ்ரா கார்க் பணி​யாற்​றிய​போது போதைப் பொருள் உற்​பத்தி மற்​றும் சட்ட விரோதக் கடத்​தலை ஒழிப்​ப​தில் தீவிரம் காட்​டி​னார்.

இந்த சீரிய பணியை அங்​கீகரித்து தமிழக அரசு 2023-ம் ஆண்டு சுதந்​திர தின விழா​வில் அவருக்கு சிறப்​புப் பதக்​கம் வழங்கி கவுர​வித்​தது. கரூரில் விஜய் கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த வழக்​கில், அதுபற்றி விசா​ரிக்க அஸ்ரா கார்க் தலை​மையி​லான சிறப்பு புல​னாய்​வுக் குழுவை நியமித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

ஆனால் நீதி​மன்ற உத்​தர​வுக்கு எதி​ராக சிபிஐ விசா​ரணை​யைக் கோரியது தவெக. தற்​போது தவெக அரசு பதவி​யேற்ற நிலை​யில் அஸ்ரா கார்க் உளவுத்​துறை ஐ.ஜி.​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு முன்பு உளவுத்​துறை கூடு​தல் டிஜிபியாக டேவிட்​சன் தேவாசீர்​வாதம், ஐ.ஜி.யாக செந்​தில்​வேலன் நீண்ட காலம் பணி​யாற்​றினர். இவர்​களு​டன் டிஐஜி, எஸ்​.பி.க்​களும் பணி​யாற்​றினர்.

தேர்​தல் நெருங்​கிய நேரத்​தில் டேவிட்​சன் தேவாசீர்​வாதம் மாற்​றப்​பட்டு முழுப் பொறுப்​பை​யும், பிற அதி​காரி​களு​டன் ஐஜி செந்​தில்​வேலன் கவனித்​தார். இதையடுத்​து, இப்​பிரிவுக்கு டிஜிபியாக பால​நாகதேவி சமீபத்​தில் நியமிக்​கப்​பட்டு பணி​யில் உள்​ளார்.

தேர்​தல் அறி​விப்பு வெளி​யான பின்​னர் செந்​தில்​வேலன் மாற்​றப்​பட்டு ஐ.ஜி.யாக அவி​னாஷ் குமாரை தேர்​தல் ஆணை​யம் நியமித்​தது. இந்​நிலை​யில்​தான் அவி​னாஷ் குமார்​ மாற்றப்பட்டு அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT