சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. இதில் களரி, ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற சாகசங்கள் மற்றும் தீவிரவாத முகாம்களை அழிப்பது போன்ற செயல் விளக்கத்தை வீரர்கள் நிகழ்த்திக் காட்டினர். படங்கள்: எம்.முத்துகணேஷ்

 
தமிழகம்

பரங்கிமலையில் களரிப்பயற்று முதல் குதிரையேற்றம் வரை ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சி

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ராணுவ அதி​காரி​கள் பயிற்சி மையத்​தில் பயிற்சி முடித்த ராணுவ அதி​காரி​களின் வீரதீர சாகச நிகழ்ச்​சிகள் நேற்று நடை​பெற்​றன. சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதி​காரி​கள் பயிற்சி மையத்​தில் (ஓடிஏ), குறுகிய கால சேவை ஆணை​யம் (எஸ்​எஸ்​சி) உள்​ளிட்ட பிரிவு​களுக்​கான அதி​காரி​களுக்கு பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு நடை​பெறவுள்​ளது.

முன்​ன​தாக, சென்னை ராணுவ அதி​காரி​கள் பயிற்சி மையத்​தின் தளபதி லெப்​டினன்ட் ஜெனரல் மைக்​கேல் ஏ.ஜே.பெர்​னாண்​டஸ் முன்​னிலை​யில் சாகச நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன.

இதில் பயிற்​சியை முடித்து ராணுவ அதி​காரி​களாக பொறுப்​பேற்​கக் காத்​திருக்​கும் பயிற்சி அதி​காரி​கள், தங்​களின் கடினப் பயிற்​சி​யின் வெளிப்​பா​டாகப் பல்​வேறு சாகசங்​களை செய்து காட்​டினர்.

நிகழ்ச்​சி​யின் தொடக்​கத்​தில், ராணுவ வீரர்​களின் அடிப்​படை பலமான உடல் தகுதி திறன்​கள் காட்​சிப்​படுத்​தப்​பட்​டன. அதைத்​தொடர்ந்​து, இந்​திய ராணுவத்​தின் பிரத்​யேக தற்​காப்பு கலை முறை​யான ‘அமர்’ மூலம் ஆயுதங்​கள் இன்றி எதிரி​களை எதிர்​கொள்​ளும் நுணுக்​கங்​களை அதி​காரி​கள் நிகழ்த்​திக் காட்​டினர்.

குதிரையேற்ற வீரர்​களின் லாவக​மான செயல்​பாடு​களும், குதிரைக்​கும் வீரருக்​கும் இடையி​லான ஒருங்​கிணைந்த சாகசங்​களும் பார்​வை​யாளர்​களை வியப்​பில் ஆழ்த்​தின. கேரளா​வின் பாரம்​பரிய தற்​காப்பு கலை​யான களரிப்​பயற்​று, அதன் தாள லயத்​துடன் கூடிய உடல் அசைவு​களால் அனை​வரை​யும் கட்​டிப்​போட்​டது.

நிகழ்ச்​சி​யின் இறு​திப் பகு​தி​யாக, போர்க்​களத்​தில் எதிரி​களின் பதுங்கு குழிகளை தகர்க்​கும் ‘பங்​கர் பஸ்​டிங்’ ஒத்​திகை நிகழ்த்​தப்​பட்​டது. இது அதி​காரி​களின் ஆவேச​மான தாக்​குதல், போர்த்​திறனை உறு​திப்​படுத்​தும் வித​மாக அமைந்​தது. நிகழ்ச்​சி​யின் இறு​தி​யில், சாகசங்​களில் ஈடு​பட்ட அதி​காரி​களை லெப்​டினன்ட் ஜெனரல் மைக்​கேல் ஏ.ஜே. பெர்​னாண்​டஸ் பாராட்​டி​னார்.

SCROLL FOR NEXT