தமிழகம்

1,429 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடை

செய்திப்பிரிவு

மதுரை: கன்​னி​யாகுமரி மாவட்​டம் விளவங்​கோடு பகு​தி​யைச் சேர்ந்த கதிர் ஜாய்​சன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: சுகா​தா​ரத் துறை​யில் 1,429 ஆய்​வாளர் பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான எழுத்​துத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்​பர் 7-ல் நடை​பெற்​றது. இதில் பல்​வேறு முறை​கேடு​கள் நடந்​தன.

தேர்வு மையங்​களில் செல்​போன் பயன்​படுத்​த​வும், காப்​பியடிக்​க​வும் அனு​ம​திக்​கப்​பட்​டது. எனவே, இந்த தேர்வை ரத்து செய்​து, மறு தேர்வு நடத்த உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

          

மனுவை நீதிபதி பி.பு​கழேந்தி விசா​ரித்​தார். மனு​தா​ரர் தரப்​பில், “தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு விரை​வில் பணி நியமனம் வழங்​கப்பட உள்​ளது. தேர்​வில் நடந்த முறை​கேடு குறித்து உரிய விசா​ரணை நடத்​தாமல், பணி நியமனம் வழங்​கக் கூடாது” என வாதிடப்​பட்​டது. அரசு வழக்​கறிஞர் வாதிடும்​போது, “வி​சா​ரணை நிறைவடை​யாமல், பணி நியமன ஆணை வழங்​கப்​ப​டாது” என்று தெரி​வித்​தார்.

இதை பதிவு செய்​து​கொண்ட நீதிப​தி, “1,429 சுகா​தார ஆய்​வாளர் பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான பணி நியமனங்​களை வழங்க இடைக்​கால தடை விதிக்​கப்​படு​கிறது. தேர்​வில் நடை​பெற்ற முறை​கேடு புகார் குறித்து சுகா​தா​ரத் துறை முதன்​மைச் செயலர் பதில் அளிக்க வேண்​டும்” என்று உத்​தர​விட்​டு, வி​சா​ரணை​யை தள்​ளி​வைத்​தார்​.

SCROLL FOR NEXT