தமிழகம்

அமோனியா வாயுக் கசிவு விபத்தில் மேலும் ஒரு பெண் தொழிலாளர் உயிரிழப்பு

இறப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்வு

செய்திப்பிரிவு

திரு​வள்​ளூர்: கடல் உணவு பதப்​படுத்​தும் நிறு​வனத்​தில் ஏற்​பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்​தில் ஏற்​கெனவே 8 பெண் தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்த நிலை​யில், மேலும் ஒரு பெண் தொழிலா​ளர் நேற்று உயி​ரிழந்​தார். இதனால் இறந்​தோரின் எண்​ணிக்கை 9 ஆக உயர்ந்​துள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யம் அருகே கன்​னி கைப்​பேர் கிராமத்​தில் ‘செ​யின்ட்பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனி​யார் நிறு​வனம், இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்து வரு​கிறது.

இங்கு வடமாநிலங்​களைச் சேர்ந்த 200-க்​கும் மேற்​பட்​டோர் 2 ஷிப்​டு​களில் பணி​யாற்றி வரு​கின்​றனர். கடந்த 21-ம் தேதி காலை சுமார் 120 தொழிலா​ளர்​கள் பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​போது, திடீரென அமோனியா வாயுக் கசிவு ஏற்​பட்​டது.

இதனால் பணி​யில் இருந்த தொழிலா​ளர்​கள், அரு​கில் தங்​குமிடத்​தில் ஓய்​வெடுத்​துக் கொண்​டிருந்த பெண் தொழிலா​ளர்​கள் உள்​ளிட்ட 80 பேர் மயக்​கமடைந்​தனர். பலருக்கு கண் எரிச்​சல், மூச்​சுத் திணறல், வாய் மற்​றும் மூக்​கில் ரத்​தக்​கசிவு போன்ற பாதிப்​பு​கள் ஏற்​பட்​டன.

பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் உடனடி​யாக மஞ்​சங்​காரணை வேல்ஸ் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை, சிறுணி​யம் வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை மற்​றும் ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

இதில் ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த ஜுமானி ஜுவாங் (19), மாலோதி (20) ஆகிய இரு​வர் கடந்த 21-ம் தேதி​யும், ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த ஷிபானி (22), கீதா ஜுங்கா (24), பர்​பாவதி ஜுங்கா (19), ஷம்​பபடி ஜுங்கா (23), பூர்​ணிமா ஜுங்கா (19) மற்​றும் அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த ஷிட்டா ஹஸ்டா (20) ஆகிய 6 பேர் நேற்று முன்​தின​மும் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தனர்.

இந்​நிலை​யில், சென்​னை, ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அஞ்​ஜிலா சோரேன் (26) என்ற பெண் தொழிலாளர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

வேல்ஸ் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் இரு​வர் சிகிச்சை பெற்​று, தங்​குமிடத்​துக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளனர். மற்ற 69 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில் தீவிர சிகிச்​சைப் பிரி​வில் சிகிச்சை பெறும் 25-க்​கும் மேற்​பட்​ட​வர்​களில் பலரின் நிலை கவலைக்​கிட​மாக இருப்​ப​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

விவரம் சேகரிப்பு

உயி​ரிழந்​தவர்​களில் திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை மற்​றும் சென்​னை, ஸ்டான்லி அரசு மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் பிரேதப் பரிசோதனை செய்​யப்​பட்ட ஜுமானி ஜுவாங், மாலோ​தி, ஷிபானி, ஷம்​பபடி ஜுங்கா மற்​றும் கீதா ஜுங்கா ஆகிய 5 பேரின் உடல்​கள் நேற்று ஒடிசா மாநில தொழிலா​ளர் நலத்​துறை அதி​காரி​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டு, விமானம் மூலம் ஒடிசா மாநிலத்​துக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது.

விபத்து நடந்த நிறு​வனத்​தில் பணிபுரிந்து வந்த தொழிலா​ளர்​களில், விபத்​தில் சிக்​காத, விபத்​தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் தொழிலா​ளர்​களின்​ விவரங்​களை அதி​காரி​கள்​ சேகரித்​து வருகின்​றனர்​.

முதல்கட்ட ஆய்வு அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு

​அமோனியா வாயுக் கசிவு விபத்​தில் 9 தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்த விபத்து குறித்து விரி​வான விசா​ரணை நடத்தி அறிக்கை தாக்​கல் செய்ய சிறப்​புக் குழுவை முதல்​வர் விஜய் அமைத்​திருந்​தார்.

தொழில​கப் பாது​காப்​புத் துறை இயக்​குநர், சுகா​தா​ரத் துறை கூடு​தல் இயக்​குநர், மாசுக் கட்​டுப்​பாடு வாரிய உறுப்​பினர் செயலர் ஆகியோர் இதில் இடம் பெற்​றிருந்​தனர். 24 மணி நேரத்​துக்​குள் முதல்​கட்ட அறிக்​கை​யை​யும், 3 நாட்​களுக்​குள் முழு அறிக்​கை​யை​யும் சமர்ப்​பிக்​கு​மாறு முதல்​வர் உத்​தர​விட்​டிருந்​தார்.

அதன்​படி, நேற்று முதல்​கட்ட அறிக்​கையை அந்த குழு முதல்​வரிடம் சமர்ப்​பித்​தது. அந்த அறிக்​கை​யில், இந்த விபத்து நடந்த சம்​பவத்​தின் பின்​னணி, பாதிப்பு நடந்த விதம், அதற்​கான காரணங்​கள், பாதித்​தவர்​களின் விவரங்​கள், அரசு சார்​பில் மேற்​கொள்​ளப்​பட்ட மீட்பு நடவடிக்​கைகள், மருத்​துவ சிகிச்​சைகள், சட்ட நடவடிக்​கைகள் ஆகிய முதல் நிலை விசா​ரணை​யின் அடிப்​படையி​லான தகவல்​கள் இடம்​பெற்​றன. முழு​மை​யான விவரங்​கள் அடங்​கிய அறிக்​கையை சில தினங்​களில் குழு​வினர் முதல்​வரிடம் சமர்ப்​பிக்க உள்​ளனர்.

SCROLL FOR NEXT