தமிழகம்

கட்டுப்பாடுகளால் மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தம்: நீட் தேர்வு பாதுகாப்பு குறித்து அண்ணாமலை விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘நீட் மறு​தேர்​வுக்​கான பாது​காப்பு விதி​கள் மாணவர்​களுக்கு கூடு​தல் மன அழுத்​தத்தை ஏற்​படுத்​தும்’ என அண்​ணா​மலை விமர்​சித்​துள்​ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளப் பதி​வில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: சிஆர்​பிஎஃப் மற்​றும் சிஐஎஸ்​ எஃப் வீரர்​களின் 2 அடுக்கு பாது​காப்​புடன் இந்​திய விமானப்​படை​யின் வான்​வழிப் போக்​கு​வரத்​து.

செயற்கை நுண்​ணறிவு கண்​காணிப்​புடன் கூடிய 4 அடுக்கு சிசிடிவி கண்​காணிப்​பு. உள்ளே நுழைவதற்கு முன்​ன​தாக பயோ மெட்​ரிக் மற்​றும் முக அடை​யளம் காணும் சோதனை.

பல கட்ட உடல் பரிசோதனை​கள். பிரதமர் அலு​வல​கத்​தின் நேரடி கண்​காணிப்​புடன் கூடிய பலநிலை மேற்​பார்​வை... இவையெல்​லாம் ஏதோ உயர்​

நிலை, வகைப்​படுத்​தப்​பட்ட, ராணுவத் தரத்​திலான மென்​பொருளை வாங்​கு​வதற்​கான ஏற்​பாடு​கள் அல்ல.

ஜூன் 21-ம் தேதி நடை​பெறவுள்ள நீட் மறு​தேர்​வுக்​காக மத்​திய கல்வி அமைச்​சகம் மேற்​கொண்​டுள்ள பாது​காப்பு ஏற்​பாடு​கள்தான். நுழைவுக்கு முந்​தைய தீவிர சோதனை, உடல் பரிசோதனை, தேர்​வின் மொத்த நேரத்தை 180 நிமிடங்​களி​லிருந்து 195 நிமிடங்​களாக அதி​கரித்​தது ஆகியவை மாணவர்​கள் மீது இது சுமத்​தும் கூடு​தல் சுமை என்​பதை அவர்​கள் மறந்​து​விட்​டனர்.

நீட் மறு​தேர்​வுக்​காக வடிவ​மைக்​கப்​பட்​டுள்ள இந்த அணுகு​முறை சிக்​கலைத் தீர்க்​காது. மாறாக, புதிய சிக்​கல்​களை உரு​வாக்​கும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT