தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் நடைபெற்ற பொங்கல் விழாவைத் தொடங்கிவைத்தார் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை.

 
தமிழகம்

கனிமவள கொள்ளையை தடுக்காத திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தென்​காசி: தமிழகத்​தில் கனிமவளக் கொள்​ளையை தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என்று பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கூறி​னார்.

பாஜக சார்​பில் தென்​காசி மாவட்​டம் வாசுதேவநல்​லூரில் நடை​பெற்ற பொங்​கல் விழாவுக்கு கட்​சி​யின் மாவட்​டத் தலை​வர் ஆனந்​தன் அய்​யா​சாமி தலைமை வகித்​தார். விழா​வில் 1,300 பானை​களில் பெண்​கள் பொங்​கலிட்​டனர்.

சிறப்பு விருந்​தின​ராக கலந்​து​கொண்ட பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை, உறியடி நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​று, பானையை உடைத்​தார். பின்​னர் அண்​ணா​மலை பேசி​ய​தாவது: நல்ல மனிதர்​களை சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களாக தேர்ந்​தெடுக்க வேண்​டும். வரும் தேர்​தலில் தேசி​ய​வாத சிந்​தனை உள்​ளவர்​களை வெற்​றி​பெறச் செய்ய வேண்​டும்.

வாசுதேவநல்​லூர் தொகு​தி​யில் மட்​டும் ஒரு லட்​சம் ஏக்​கர் விவ​சாய நிலங்​கள் இருந்​தன. ஆனால், செண்​பகவல்லி தடுப்​பணை​யில் இருந்து தண்​ணீர் கிடைக்​காமல் போன​தால் விளை நிலங்​கள் குறைந்​து​விட்​டன.

செண்​பகவல்லி தடுப்​பணையை சரி செய்​து, தண்​ணீரை கொண்​டு​வரு​வ​தாக திமுக தேர்​தல் அறிக்​கை​யில் கூறினர். ஆனால், எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. இது​போல, திமுக​வின் தேர்​தல் வாக்​குறு​தி​கள் பெரும்​பாலானவற்றை நிறைவேற்​ற​வில்​லை.

தமிழக முதல்​வர் 5 முறை கேரள முதல்​வரை சந்​தித்​தார். ஆனால் ஒரு​முறை​கூட செண்​பகவல்லி தடுப்​பணை குறித்து அவர் பேச​வில்​லை. தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சிக்கு வரும்​போது, மத்​திய அரசு மூலம் கேரள அரசுக்கு அழுத்​தம் கொடுத்​து, செண்​பகவல்லி அணை சீரமைக்​கப்​படும்.

தென்​காசி உட்பட தமிழகத்​தில் கனிமவளக் கொள்ளை அதி​கரித்து வரு​கிறது. இதைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. திமுக சுற்​றுச்​சூழல் அணி துணை அமைப்​பாள​ராக இருந்​தவர், கனிமவளக் கொள்​ளையை அரசு தடுத்து நிறுத்​தாத​தால் பதவி வில​கி​யுள்​ளார். இவ்​வாறு அண்​ணா​மலை கூறி​னார். விழா​வில், தென்​னிந்​திய பார்​வர்ட் பிளாக் கட்சி நிறு​வனத் தலை​வர் திரு​மாறன் மற்​றும் பாஜக நிர்​வாகி​கள் கலந்​து​கொண்​டனர்.

SCROLL FOR NEXT