ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து அனிதா ராதா கிருஷ்ணனை கைது செய்து அழைத்து வரும் போலீஸார்.

 
தமிழகம்

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: 5 மணி நேரத்துக்கு மேல் விசாரணை

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி/ சென்னை: ​முதல்​வர் விஜய் குறித்து ஒரு​மை​யிலும், அவதூறாக​வும் பேசி​யது தொடர்​பாக திமுக முன்​னாள் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணனை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். எஸ்​.பி. அலு​வல​கத்​தில் அவரிடம் 5 மணி நேரத்​துக்கு மேல் விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

தூத்​துக்​குடி மாவட்​டம் ஆத்​தூரில் திமுக சார்​பில் முன்​னாள் முதல்​வர் கருணாநிதி பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டம் கடந்த ஜூன் 20-ம் தேதி நடை​பெற்​றது. இதில் பேசிய முன்​னாள் அமைச்​சரும், தூத்​துக்​குடி தெற்கு மாவட்ட திமுக செய​லா​ள​ரு​மான அனிதா ராதாகிருஷ்ணன் எம்​எல்ஏ, ஒரு​மை​யிலும், அவதூறாக​வும் முதல்​வர் விஜய் பற்றி பேசி​ய​தாக, ஆத்​தூர் காவல் நிலை​யத்​தில் தவெக நகரச் செய​லா​ளர் செல்​வ​முரு​கன் புகார் கொடுத்​தார். அதன்​பேரில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது 2 பிரிவு​களின்​கீழ் (பிஎன்​எஸ் 352 & 353-2) போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர்.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி: இதற்​கிடையே, அனிதா ராதாகிருஷ்ணன் தாக்​கல் செய்​த முன்​ஜாமீன் மனு, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அனிதா ராதாகிருஷ்ணன் மற்​றும் அரசுத் தரப்​பின் வாதங்​களைக் கேட்ட நீதிப​தி, ‘‘1967-ம் ஆண்​டுக்​குப் பிறகு தமிழகத்தை பெரும்​பாலும் திரைத்​துறையைச் சேர்ந்​தவர்​கள்​தான் ஆட்சி புரிந்​துள்​ளனர்.

மக்​களாகிய நாம்​தான் வாக்​களித்து அவர்​களைத் தேர்ந்​தெடுத்​தோம். மனு​தா​ரர் சாதாரண குடிமகன் அல்ல. மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட சட்​டப்​பேரவை உறுப்​பினர். அவர் இது​போல முதல்​வரை அவதூறாகப் பேசி​யிருக்க கூடாது’’ என்று கூறி முன்​ஜாமீன் மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில், ஆத்​தூர் பேரூ​ராட்சி அலு​வல​கத்தில் நேற்று காலை மக்​கள் குறை தீர்வு கூட்​டத்தை அனிதா ராதாகிருஷ்ணன் நடத்​திக் கொண்​டிருந்​தார். காலை 11.20 மணி அளவில் அங்கு வந்த ஏடிஎஸ்பி திபு, ஆய்​வாளர் ரென்​னிஸ் தலை​மையி​லான போலீ​ஸார் அவரை கைது செய்​யப்​ போவ​தாக தெரி​வித்​தனர்.

அதற்கு அவர், ‘‘வழக்​கறிஞர் இல்​லாமல் வரமாட்​டேன்’’ என்று கூறி தனது காரில் ஏறி​னார். அவரை போலீ​ஸார் சமா​தானம் செய்து தங்​கள் வாக​னத்​தில் ஏற்​றி, தூத்​துக்​குடி எஸ்​.பி. அலு​வல​கத்​துக்கு அழைத்து வந்​தனர். பகல் 12.30 மணி முதல் அவரிடம், எஸ்​.பி. அபிஷேக் குப்தா மேற்​பார்​வை​யில், போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர்.

இதற்​கிடையே, எஸ்​.பி. அலு​வலக வாயி​லில் திமுக வழக்​கறிஞர்​கள், நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் திரண்​டனர். ‘‘அனிதா ராதாகிருஷ்ணன் உடல்​நலம் பாதிக்​கப்​பட்​ட​வர். மருத்​து​வரை உள்ளே அனு​ம​திக்க வேண்​டும்’’ என்று கூறி போலீ​ஸாருடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். இதையடுத்​து, அனிதா ராதா

கிருஷ்ணனின் மகன், குடும்ப மருத்​து​வர், ஒரு வழக்​கறிஞரை போலீ​ஸார் உள்ளே அனு​ம​தித்​தனர். தூத்​துக்​குடி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை இதய சிகிச்​சைப் பிரிவு மருத்​து​வர் ராஜவேல் முரு​கன் தலை​மை​யில் 4 பேர் கொண்ட மருத்​து​வக் குழு​வினரும் மருத்​து​வப்பரிசோதனை செய்தனர்.

இதற்கிடையே, விசா​ரணை சுமார் 5 மணி நேரத்​துக்கு மேல் நீடித்​தது. மாலை 6.10 மணிக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், ‘‘எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணையுமாறு சிலர் வலியுறுத்தினர். யாருக்கும் அடிபணிய மாட்டேன்’’ என்றார்.

41 பேர் கைது: இதற்கிடையே, எஸ்​.பி. அலு​வல​கத்​துக்கு வந்த தூத்​துக்​குடி மேயர் ஜெகன் பெரிய​சாமி, எம்​எல்ஏக்கள் மார்க்​கண்​டேயன், அப்​துல் வஹாப் உள்​ளிட்ட திமுக​வினரை வில​கிச் சென்று நிற்​கு​மாறு தூத்​துக்​குடி ஊரக டிஎஸ்பி சுதிர் கூறிய​தால் சலசலப்பு ஏற்​பட்​டது. அதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​ட​தால் தென்​காசி மாவட்ட தி​முக முன்​னாள் செய​லா​ளர்​ சிவபத்​ம​நாபன்​ உட்​பட 9 பேரும், திருச்செந்தூரில் மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 32 திமுகவினரும் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT