சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரிப் பாசன மாவட்டங்களில் பெய்த கனமழையால் 2 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை மற்றும் சம்பா பயிர்களும், டிட்வா புயலால் 3 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்களும் சேதமடைந்தன.
சேதம் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, தலைமைச் செயலகத்துக்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டு விட்டன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.