தமிழகம்

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் இப்போது வரும் தண்ணீரும் கிடைக்காது: அன்புமணி கவலை

செய்திப்பிரிவு

சென்னை: மேகேதாட்டு அணை மட்​டும் கட்​டப்​பட்​டால் கபினி அணை​யில் இருந்து இப்​போது வரும் தண்​ணீரும் கிடைக்​காது என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: கர்​நாடகத்​தில் கபினி அணை நிரம்​பிய​தால் தமிழகத்​துக்கு காவிரி​யில் தண்​ணீர் திறப்பு அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​துக்கு சட்​டப்​படி​யாக வழங்​கப் பட வேண்​டிய நீரை வழங்க கர்​நாடக அரசு தயா​ராக இல்​லை.

ஆனால், உபரிநீரை திறந்து விடும் வெள்ள வடி​காலாக மட்​டுமே தமிழகத்​தின் காவிரியை பயன்​படுத்​துகிறது என்​ப​தை​யுமே இது காட்​டு​கிறது மேகே​தாட்டு அணை மட்டும் கட்​டப்​பட்​டிருந்​தால் கபினி அணையி​லிருந்து திறக்​கப்​பட்​டுள்ள தண்​ணீரும் கூட தமிழகத்​துக்கு கிடைக்​காது.

அதனால், மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் தவறான நிலைப்​பாடுகளை எடுத்து கர்​நாடக அரசின் சதிகளுக்​கும், சூழ்ச்​சிகளுக்​கும் தமிழக அரசு இரை​யாகி விடக்​கூ​டாது. அனைத்து கட்சிகள், வேளாண் அமைப்​பு​களின் கருத்துகளை அறிந்து தெளி​வான செயல்​திட்​டத்தை உரு​வாக்க வேண்​டும் என்று தெரி​வித்​துள்​ளார்.

மாமல்​லன் நீர்த்​தேக்​கம்

அன்​புமணி வெளி​யிட்ட மற்​றொரு அறிக்​கை​யில், “சென்​னையை அடுத்த கானத்​தூர் ரெட்​டிக்​குப்​பத்​துக்​கும், கொக்​கி​லிமேட்​டுக்​கும் இடைப்​பட்ட பகு​தி​யில் உள்ள உப்​பங்​கழிகளை அழித்து 5,161 ஏக்​கர் நிலப்​பரப்​பில் மாமல்​லன் நீர்த்​தேக்​கத்​துக்கு முந்​தைய திமுக ஆட்​சி​யில் கடந்த ஜனவரி 19-ம் தேதி அடிக்​கல் நாட்​டப்​பட்​டது.

சென்னை கிழக்கு கடற்​கரை பகு​தி​களில் வாழும் 5 ஆயிரம் மீனவர் குடும்​பங்​களின் வாழ்​வா​தா​ரத்​துக்​கும், சுற்​றுச்​சூழலுக்​கும் சரி செய்ய முடி​யாத அளவுக்கு பாதிப்பை ஏற்​படுத்​தக் கூடிய இந்த திட்​டத்தை தமிழக அரசு கைவி​டாது என்று வெளி​யாகி​யுள்ள செய்​தி​கள் அதிர்ச்​சி​யளிக்​கின்​றன.

இந்த திட்​டத்தை கைவிடு​வ​தாக உறு​தி​யளித்து ஆட்​சிக்கு வந்த தவெக இப்​போது பின்​வாங்​கு​வது கண்​டிக்​கத்​தக்​கது​” என்​று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT