அன்புமணி ராமதாஸ் 
தமிழகம்

எந்தக் கவலையும் இல்லாமல் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதா? - முதல்வருக்கு அன்புமணி கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் அரசுக்கு எதி​ராக போராட்​டங்​கள் நடத்​தப்​பட்டு வரும் நிலை​யில், எந்த கவலை​யும் இல்​லாமல் முதல்​வர் ஸ்டாலின் கொண்​டாட்​டங்​களில் ஈடு​பட்டு கொண்​டிருக்​கிறார் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: பகுதி நேர ஆசிரியர்​களும் அனைத்​துத் துறை​களி​லும் பணி​யாற்​றும் மாற்​றுத்​திற​னாளி தற்​காலிக பணி​யாளர்​களும் சென்​னை​யில் தொடர்​ போ​ராட்​டத்​தை​ மேற்​கொண்​டுள்​ளனர்.

திமுக ஆட்​சிக்கு வந்து 55 மாதங்​கள் நிறைவடைந்த நிலை​யில், இன்று வரை தேர்​தல் அறிக்​கை​யில் தந்த வாக்​குறு​தி​கள் நிறைவேற்​றப்​பட​வில்​லை. வாக்​குறு​தியை நிறைவேற்​றக் கோரி போராடி​னால், அடக்​கு​முறையைத் தான் பரி​சாக அளிக்​கிறது திமுக அரசு. தமிழகத்​தில் எங்கு திரும்​பி​னாலும் அரசுக்கு எதி​ராக போராட்​டங்​கள் நடந்து வருகிறது.

ஆனால், இதுகுறித்த எந்த கவலை​யும் இல்​லாமல் கொண்​டாட்​டங்​களில் ஈடு​பட்டு கொண்​டிருக்​கிறார் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின். அனைத்து அரசு ஊழியர்​கள் மற்​றும் தமிழக மக்​களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் திமுக அரசுக்கு வரும் தேர்​தலில் மக்​கள் தி​முகவை ஆட்சி பொறுப்​பிலிருந்து அகற்​று​வார்​கள்​.இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT