அமித் ஷா | கோப்புப்படம் 
தமிழகம்

புதுக்கோட்டையில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

செய்திப்பிரிவு

திருச்சி / புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று (ஜன.4) நடைபெறும் பாஜக பொதுக்​கூட்​டத்​தில் மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, பியூஷ் கோயல் உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர்.

தமிழகத்​துக்கு 2 நாட்​கள் பயண​மாக இன்று வரும் அமித் ஷா, திருச்சி மற்​றும் புதுக்​கோட்​டை​யில் நடை​பெறும் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​கிறார். அந்​த​மான் நிக்​கோ​பார் சென்​றுள்ள அமைச்​சர் அமித் ஷா பாது​காப்​புத் துறை விமானம் மூலம் இன்று பிற்​பகல் 2.25 மணிக்​குப் புறப்​பட்​டு, மாலை 4.55 மணிக்கு திருச்சி விமான நிலை​யம் வரு​கிறார்.

அங்​கிருந்து ஹெலி​காப்​டரில் புதுக்​கோட்டை பாலன் நகர் கரு​வேப்​பிலான் கேட் பகு​தி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள ஹெலிபேட் தளத்​துக்கு வந்​து, அங்​கிருந்து பொதுக்​கூட்ட மேடைக்கு வரு​கிறார். தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மேற்​கொண்​டுள்ள `தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' நிறைவு விழா பொதுக்​கூட்​டத்​தில் அமித்​ஷாவுடன், மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில் துறை அமைச்​சர் பியூஷ் கோயலும் பங்​கேற்​கிறார்.

அங்கு நிகழ்ச்​சியை முடித்​து​விட்டு காரில் திருச்​சிக்​குப் புறப்​பட்டு வரும் அமித் ஷா, இரவு 8 மணி​யள​வில் ஆட்​சி​யர் அலு​வலக சாலை​யில் உள்ள தனி​யார் நட்​சத்​திர ஹோட்​டலில் ஓய்​வெடுக்​கிறார். நாளை காலை 10 மணி​யள​வில் காரில் ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர் கோயிலுக்​குச் சென்று சுவாமி தரிசனம் செய்​கிறார்.

அங்​கிருந்து புறப்​பட்டு மீண்​டும் ஹோட்​டல் திரும்​பும் அவர் ஓய்​வுக்​குப் பின்​னர், நண்​பகல் 12 மணி​யள​வில் மன்​னார்​புரம் ராணுவ மைதானத்​தில் நடை​பெறும் மோடி பொங்​கல் விழா​வில் பங்​கேற்​கிறார்.

பின்​னர் திருச்சி விமான நிலை​யம் சென்​று, அங்​கிருந்து விமானத்​தில் டெல்​லிக்​குப் புறப்​பட்​டுச் செல்​கிறார். அமித் ஷா வரு​கை​யையொட்​டி, அவர் பயணிக்​கும் சாலைகள், ஹெலிபேட் , விழா நடை​பெறும் இடங்​களில் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

மேலும், திருச்​சி, புதுக்​கோட்டை மாவட்​டங்​களில் ட்ரோன்​கள் பறக்​க​விட தடை விதித்து மாவட்​டஆட்​சி​யர்​கள் உத்​தர​விட்​டுள்​ளனர். புதுக்​கோட்டை பொதுக்​கூட்​டத்​துக்​கான விரி​வான ஏற்​பாடு​களை பாஜக​வினர் மேற்​கொண்டு வரும் நிலை​யில், பொதுக்​கூட்​டத் திடல் அருகே அமைக்​கப்​பட்​டுள்ள ஹெலிபேடில் நேற்று ஹெலி​காப்​டரை இயக்கி சோதனை மேற்​கொள்​ளப்​பட்​டது.

SCROLL FOR NEXT