தமிழகம்

திருவண்ணாமலைக்கு அமித் ஷா இன்று வருகை

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: ​திரு​வண்​ணா​மலைக்கு மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா இன்று வருகை தர உள்​ளதையொட்டி முன்​னேற்​பாடு மற்​றும் பாது​காப்பு ஏற்​பாடு​கள் தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா இன்று மாலை சென்னை வரு​கிறார். அங்​கிருந்து ஹெலி​காப்​டர் மூலம் திரு​வண்​ணா​மலை வரு​கிறார். திரு​வண்​ணா​மலை -செங்​கம் சாலை​யில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்​லூரி​யில் அமைந்​துள்ள இறங்​கு தளத்​தில் ஹெலிகாப்டரில் வரும் அவர், மாலை 4.30 மணிக்கு ரமண மகரிஷி ஆசிரமத்​துக்​குச் செல்​கிறார்.

பின்​னர் அங்​கிருந்து புறப்​பட்டு அண்​ணா​மலை​யார் கோயிலுக்குச் செல்​கிறார். அங்கு தரிசனம் முடிந்த பின்​ புதுச்​சேரிக்கு சாலை மார்க்​க​மாகச்செல்கிறார். அங்கு புதுச்சேரி காவல் துறைக்கு விருதுகளை வழங்கி பேசுகிறார்.

அமித் ஷா வருகையையொட்​டி, ஹெலி​காப்​டர் தரை இறங்​கும் தளத்​தில் மத்​திய உள்​துறை பாது​காப்பு அலு​வலர்​கள் மற்​றும் பாது​காப்​புப் படை​யினர் ஆய்வு செய்தனர். ஹெலி​காப்​டரை தரை இறக்கி சோதனை செய்​தனர். மேலும் அண்​ணா​மலை​யார் கோயி​லிலும் ஆய்வு மேற்​கொண்​டனர். திரு​வண்​ணா​மலை​யில் ட்ரோன்​கள் பறக்க தடை​வி​திக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT