உள்துறை அமைச்சர் அமித் ஷா 
தமிழகம்

தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக வரும் அமித் ஷா

திருச்சி, புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்

செய்திப்பிரிவு

சென்னை / திருச்சி: மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா 2 நாள் பயண​மாக வரும் 4-ம் தேதி தமிழகம் வரு​கிறார். திருச்​சி, புதுக்​கோட்​டை​யில் நடை​பெறும் நிகழ்ச்​சிகளில் அவர் பங்​கேற்​கிறார்.

இது தொடர்​பாக பாஜக துணைத் தலை​வர் கரு.​நாக​ராஜன் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: குடியரசுத் துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் ஜன. 2-ம் தேதி (இன்​று) சென்னை வருகை தரு​கிறார். காலை​யில் டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​து​வப்பல்​கலை. பட்​டமளிப்பு விழா​வில் பங்​கேற்​கும் அவர், மாலை​யில் கலை​வாணர் அரங்​கில் நடை​பெறும் அவருக்​கான பாராட்டு விழா​வில் பேசுகிறார்.

இதே​போல, மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா வரும் 4-ம் தேதி புதுக்​கோட்​டைக்கு வரு​கிறார். பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் நடத்தி வரும் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற யாத்​திரை​யின் நிறைவு விழா​வில் அவர் உரை​யாற்​றுகிறார். இந்​தப் பொதுக்​கூட்​டத்​தில் சுமார் 2 லட்​சம் பேர் பங்​கேற்க உள்​ளனர். அன்று இரவு அமித் ஷா திருச்​சி​யில் தங்​கு​கிறார்.

வரும் 5-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்​கம் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​யும் அமித் ஷா, தொடர்ந்து மன்​னார்​புரம் ராணுவத்​திடலில் 2 ஆயிரம் பெண்​கள் பங்​கேற்​கும் “மோடி பொங்​கல்” விழா​வில் கலந்து கொள்​கிறார். பின்​னர், திருச்​சி​யில் இருந்து டெல்லி புறப்​பட்​டுச் செல்​கிறார். தொடர்ந்​து, பாஜக தேசி​யத் தலை​வர்​கள் அடுத்​தடுத்து தமிழகம் வரவுள்​ளனர். பிரதமர் மோடி​யும் தமிழகம் வரவுள்​ளார். பொங்​கலுக்​குப் பிறகு கூட்​டணி இறுதி வடிவம் பெறும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

பாஜகவை பார்த்து அச்​சம்: திருச்சி மன்​னார்​புரம் ராணுவமைதானத்​தில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்​கும் பொங்​கல் விழாவுக்​கான கால்​கோள் விழா நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற பாஜக மாநிலப் பொதுச் செய​லா​ளர் கருப்பு முரு​கானந்​தம், செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வரும் 5-ம் தேதி நடை​பெறும் பாஜக உயர்​மட்​டக் குழுக் கூட்​டத்​தில் பங்​கேற்​கும் அமித் ஷா, தமிழகத்​தின் அரசி​யல் நில​வரம் குறித்து கேட்​டறிந்​து, வழி​காட்​டு​தல்​களை அளிக்க உள்​ளார்.

புதுக்​கோட்​டை​யில் நடை​பெறும் பாஜக பொதுக்​கூட்​டத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மற்​றும் கூட்​டணி கட்​சித் தலை​வர்​கள் பங்​கேற்​க​வில்​லை. பழனி​சாமி​யின் சுற்​றுப்​பயணம் நிறைவு​பெற்ற பின்​னர், தேஜகூ சார்​பில் பெரிய அளவி​லான பொதுக்​கூட்​டம் நடத்​தப்​படும். திமுக மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சி​யினருக்கு பாஜகவை பார்த்து அச்​சம் ஏற்​பட்​டுள்​ளது. பிஹார் உள்​ளிட்ட மாநிலங்​களைப்​போல தமிழகத்​தி​லும் தேஜகூ வெல்​லும். பின்​னர், தமிழகத்​தில் திமுக இல்​லாத நிலையை ஏற்​படுத்​து​வோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT