தமிழகம்

ஆளுநர் உரை நடைமுறையை மாற்ற சட்டத் திருத்தம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: ஆண்​டின் தொடக்​கத்​தில் ஆளுநர் உரை என்ற நடை​முறையை மாற்​று​வதற்​கான அரசி​யலமைப்பு சட்​டத் திருத்​தத்தை திமுக முன்​னெடுக்​கும் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார்.

சட்​டப்​பேர​வை​யின் ஆண்டு முதல் கூட்​டம் நேற்று தொடங்​கிய நிலை​யில், ஆளுநர் ஆர்​.என்​.ரவி உரையை வாசிக்​காமல் வெளி​யேறி​னார். இதையடுத்​து, முதல்​வர் ஸ்​டா​லின், ஆளுநர் உரை தொடர்​பான தீர்​மானத்தை கொண்​டு​வந்து பேசி​ய​தாவது: மீண்​டும் ஒரு​முறை ஆளுநர் சட்ட விதி​களை​யும், மரபு​களை​யும் மீறி​யுள்​ளார். இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டப்​படி, ஆளுநர் உரை என்​பது மாநில அரசால் தயாரிக்​கப்​பட்​டு, ஆளுந​ரால் முழு​மை​யாகப் படிக்​கப்பட வேண்​டும். ஆளுநர் சொந்த கருத்​துகளைத் தெரிவிக்​கவோ, நீக்​கவோ சட்​டத்​தில் இடமில்​லை.

          

அரசி​யலமைப்​புச் சட்​டத்​தில் ஆளுநர் உரை தொடர்​பான தெளிவுரைகளைக் கேட்க அவருக்கு வழி​யில்​லா​விட்​டாலும், ஆளுநர் கோரிய விளக்​கங்​களுக்கு தமிழக அரசு பதில் அளித்​துள்​ளது. இந்​நிலை​யில், வேண்​டுமென்றே அரசி​யலமைப்பை ஆளுநர் மீறி​யுள்​ளார். நூற்​றாண்​டு​கால மரபும், பாரம்​பரிய​மும் கொண்ட மக்​கள் சபையை, அதன் மாட்​சிமையை ஆளுநர் செயல்​பாடு​கள் அவம​திக்​கின்​றன.

ஆளுநர் என்​பவர் மாநில நலனில் அக்​கறை​யும், மக்​கள் மேம்​பாட்​டில் ஆர்​வ​மும் கொண்​ட​வ​ராக, உண்​மை​யைப் பேசுபவ​ராக இருக்க வேண்​டும். மாநில அரசு எடுக்​கும் முடிவு​களுக்கு ஒத்​துழைப்​பவ​ராக இருக்க வேண்​டும். ஆனால், ஆளுநர் அதற்கு நேர்​மாறாக செயல்​படு​கிறார். மாநில நிர்​வாகத்தை முடக்​க​வும், பொது மேடைகளில் அரசி​யல் பேசி​யும் அவதூறு பரப்​பு​கிறார்.

ஆளுநருக்கு அனுப்பி வைக்​கப்​பட்ட உரை, இங்கு ஆளுந​ரால் படிக்​கப்​பட்​ட​தாக பேரவை கருதுகிறது. மரபுவழி நிகழ்​வு​கள், பேர​வைத் தலை​வ​ரால் படிக்​க​வுள்ள ஆளுநர் உரை​யின் தமிழாக்​கம் மற்​றும் நான் முன்​மொழிகின்ற தீர்​மானம் ஆகியவை மட்​டும் பேரவை நடவடிக்கை குறிப்​பில் இடம் பெறலாம். இவ்​வாறு பேசிய முதல்​வர் ஸ்டா​லின், இதுகுறித்த தீர்​மானத்தை முன்​மொழிந்​தார்.

இதையடுத்​து, தீர்​மானம் ஒரு​மன​தாக நிறைவேறியது. இதற்கு நன்றி தெரி​வித்து முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: பல மாநிலங்​களி​லும் ஆளுநர்​கள், ஆளும் அரசுக்கு இடைஞ்​சலாக இருப்​பது தொடர்​கிறது. ஆண்​டின் தொடக்​கத்​தில் அரசின் கொள்கை அறிக்கை வாசிக்​கும் நடை​முறையை தொடர்ந்து மீறும்​போது, அது​போன்ற விதி​களை எதற்​காக வைக்க வேண்​டும் என்ற கேள்​வி எழுகிறது.

எனவே, ஆளுநர் உரை என்ற நடை​முறையை விலக்​கும் வகை​யில் அரசி​யலமைப்பு சட்​டத்​தில் திருத்​தம் கொண்​டு​ வரும் முயற்​சிகளை, ஒரு​மித்த கருத்​துகளைக் கொண்ட கட்​சிகளின் துணை​யுடன் நா​டாளு​மன்​றத்​தில் தி​முக முன்​னெடுக்​கும். இவ்​வாறு முதல்​வர்​ பேசி​னார்​.

SCROLL FOR NEXT