தமிழகம்

நிலக்கரி இறக்குமதியில் ரூ.487 கோடி முறைகேடு புகார்: 4 நிறுவனம் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து

சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: நிலக்​கரி இறக்​கும​தி​யில் ரூ.487 கோடி முறை​கேடு செய்​த​தாக தொழில​திபர் அகமது புஹாரி​யுடன் தொடர்​புடைய 4 நிறு​வனங்​கள் மீது அமலாக்​கத் துறை பதிவு செய்​திருந்த வழக்கை சென்னை சிபிஐ சிறப்பு நீதி​மன்​றம் ரத்து செய்​துள்​ளது.

கடந்த 2011-12 மற்​றும் 2014-15 ஆகிய கால​கட்​டங்​களில் இந்​தோ​னேசி​யா​வில் இருந்து தரம் குறைந்த நிலக்​கரியை இந்​தி​யா​வுக்கு இறக்​குமதி செய்​ததன் மூலம் மத்​திய அரசுக்கு ரூ.487 கோடி வரை இழப்பு ஏற்​படுத்தி முறை​கேடு செய்​த​தாக சென்​னையை தலை​மை​யிட​மாகக் கொண்ட கோஸ்​டல் எனர்ஜி நிறு​வனம், அதன் இயக்​குந​ரான தொழில​திபர் அகமது ஏஆர் புஹாரி, கோஸ்​டல் எனர்​ஜென், துபாயை தலை​மை​யிட​மாகக் கொண்ட டிஎம்​சிசி மற்​றும் எல்​எல்சி நிலக்​கரி மற்​றும் எண்​ணெய் நிறு​வனங்​கள், பிரிசி​யஸ் எனர்ஜி ஹோல்​டிங்ஸ், மொரீஷியஸில் உள்ள மியூச்​சுரியா எனர்ஜி ஹோல்​டிங்ஸ் மீது சிபிஐ வழக்​குப்​ப​திவு செய்​தது.

இந்த வழக்​கின் அடிப்​படை​யில் கடந்த 2018-ம் ஆண்டு அமலாக்​கத் துறை​யும் அகமது ஏஆர் புஹாரி மற்​றும் இந்​நிறு​வனங்​களுக்கு எதி​ராக சட்​ட விரோதப் பணப்​பரி​மாற்ற தடைச்​சட்​டத்​தின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​திருந்​தது. இந்த வழக்​கில் சென்னை சிபிஐ நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரி​கையை அமலாக்​கத் துறை தாக்​கல் செய்​தது.

இந்​நிலை​யில், அகமது ஏஆர் புஹாரிக்கு எதி​ராக சிபிஐ பதிவு செய்​திருந்த அடிப்​படை மூல வழக்கை டெல்லி உயர் நீதி​மன்​றம் கடந்​தாண்டு ரத்து செய்​தது. அதன் அடிப்​படை​யில் அகமது ஏஆர் புஹாரி மற்​றும் பிரிசி​யஸ் எனர்​ஜி, மியூச்​சுரியா எனர்ஜி ஆகிய நிறு​வனங்​களுக்கு எதி​ராக அமலாக்​கத் துறை பதிவு செய்​திருந்த வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றம் ரத்து செய்​தது.

எஞ்​சிய கோஸ்​டல் எனர்​ஜி, கோஸ்​டல் எனர்​ஜென் மற்​றும் 2 துபாய் நிறு​வனங்​கள் என 4 நிறு​வனங்​களுக்கு எதி​ராக அமலாக்​கத் துறை பதிவு செய்​திருந்த வழக்​கு​கள் மீதான விசா​ரணை சென்னை சிபிஐ சிறப்பு நீதி​மன்ற நீதிபதி ஜெ.ஓம்​பிர​காஷ் முன்​பாக நடந்​தது.

அப்​போது அமலாக்​கத் துறை தரப்​பில் சிறப்பு வழக்​கறிஞர் என்​.ரமேஷ், எதிர்​மனு​தா​ரர்​கள் தரப்​பில் வழக்​கறிஞர்​கள் பி.சதீஷ்சுந்​தர், என்​.​பாலாஜி உள்​ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்​டனர். அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி ஜெ.ஓம்​பிர​காஷ் பிறப்​பித்​துள்ள தீர்ப்​பில், “ஏற்​கெனவே அகமது ஏஆர் புஹாரிக்கு எதி​ராக சிபிஐ பதிவு செய்​திருந்த அடிப்​படை மூல வழக்கை டெல்லி உயர் நீதி​மன்​ற​மும், மற்ற இரு நிறு​வனங்​களுக்கு எதி​ரான அமலாக்​கத் துறை வழக்கை சென்னை உயர் நீதி​மன்​ற​மும் ரத்து செய்​துள்​ள​தால், எஞ்​சிய 4 நிறு​வனங்​களுக்கு எதி​ராக அமலாக்​கத் துறை பதிவு செய்​திருந்த வழக்​கு​களும் ரத்து செய்​யப்​படு​கின்​றன.

ஒரு​வேளை எதிர்​காலத்​தில் அகமது ஏஆர் புஹாரி மற்​றும் அவர் தொடர்​புடைய இந்​நிறு​வனங்​கள் மீது சிபிஐ பதிவு செய்​திருந்த அடிப்​படை மூல வழக்கு மீண்​டும் உயிர்ப்​பிக்​கப்​பட்​டால் அமலாக்​கத் துறை​யும் இந்த சட்​ட​விரோதப் பணப்​பரி​மாற்ற வழக்கை மீண்​டும் தொடரலாம்” என அனு​ம​தி​யளித்​து உத்​தர​விட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT