தமிழகம்

தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அதிமுக: தொடர்ந்து இருமுறை தோற்றது இல்லை

ச.கார்த்திகேயன்

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தொடர்ந்து 2 முறை அதி​முக தோற்​றதே இல்​லை. ஆனால் இம்​முறை வெற்றி வாய்ப்பை தவற​விட்​டிருப்​பது அதி​முக தொண்​டர்​கள் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

அதி​முக​வின் 54 ஆண்​டு​கால வரலாற்​றில் 30 ஆண்​டு​களுக்கு மேல் ஆட்​சி​யில் இருந்​துள்​ளது. தமிழகத்​தில் அடுத்​தடுத்த தேர்​தல்​களில் வென்ற ஒரே கட்​சி, தொடர்ந்து 3 முறை வென்று ஆட்​சி​யில் தொடர்ந்த கட்​சி, எம்​ஜிஆர் உயிரோடு இருக்​கும்​வரை தோல்​வியையே கண்​டி​ராத கட்சி என்ற சாதனை​களை அதி​முக படைத்​திருக்​கிறது. மேலும், இக்​கட்சி இது​வரை தொடர்ந்து 2 முறை தோற்​காத அளவுக்கு எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலை​வர்​களும் கட்​சியை நடத்தி வந்​தனர்.

இதை தக்​கவைக்க வேண்​டிய மிகப் பெரிய கடமை​யும் பொறுப்​பும் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமிக்கு இருந்​தது. அதை மனதில் வைத்து கட்​சியை வழிநடத்தி வந்​தார். ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு நடை​பெற்ற மக்​கள​வைத் தேர்​தல் தொடங்​கி, பல்​வேறு தேர்​தல்​கள் அதி​முக​வுக்கு தொடர்ந்து தோல்வி முக​மாக இருந்து வரு​கிறது. இத்​தோல்விக்கு பாஜக கூட்​டணி காரணம் என கூறப்​பட்டு வந்த நிலை​யில், 2024 மக்​களவை தேர்​தலில் பாஜக​வுடன் கூட்​டணிவைக்​காமல் போட்​டி​யிட்​டும் ஒரு இடத்​தில்​கூட வெற்றி பெற​முடிய​வில்​லை.

இந்த இக்​கட்​டான சூழலில், 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் வெற்​றி​பெற்றே ஆக வேண்​டிய கட்​டா​யத்​தில் பழனி​சாமி இருந்​தார். இதற்​காக வியூக வகுப்​பாளர்​களை நியமித்​து, பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்​டார். கடந்த ஆண்டு ஜூலை மாதமே தேர்​தல் பிரச்​சா​ரத்தை தொடங்​கி​னார். கடந்த மார்ச் 15-ம் தேதி தேர்​தல் அறி​விப்பு வெளி​யாகும்​போது, கிட்​டத்​தட்ட 170 தொகு​தி​களுக்கு மேல் பிரச்​சா​ரத்தை முடித்​திருந்​தார்.

எந்த தேர்​தலிலும் இல்​லாத வகை​யில் புது வகை​யாக, பிரச்​சா​ரத்​தின்​போதே பகுதி பகு​தி​யாக தேர்​தல் வாக்​குறு​தி​களை அறி​வித்​தும் வந்​தார். அவரைப் போன்று வேறு எந்த கட்​சித் தலை​வரும் இந்த அளவுக்கு தீவிர பிரச்​சா​ரத்தை மேற்​கொள்​ள​வில்​லை. இருப்​பினும் இந்த தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணிக்கு மூன்​றாம் இடமே கிடைத்​தது.

இந்த தேர்​தலில் அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக-வுக்கு 27 தொகு​தி​கள், பாமக​வுக்கு 18 தொகு​தி​கள், அமமுக-வுக்கு 11 தொகு​தி​கள், தமிழ் மாநில காங்​கிரஸுக்கு 5 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டன. அதி​முக 169 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. சசிகலா, டிடிவி தினகரன்,

ஓ.பன்​னீர்​செல்​வம் ஆகியோரை கட்​சி​யில் இணைக்க வேண்​டும் என்று அதி​முக​வின் மூத்த தலை​வ​ராக இருந்த செங்​கோட்​டையன் தொடர்ந்து வலி​யுறுத்தி வந்​தார். ஆனால் அவரது கோரிக்​கையை ஏற்​காத பழனி​சாமி, கட்​சியி​லிருந்து செங்​கோட்​டையனை நீக்​கி​னார். கட்சி ஒருங்​கிணைப்புக்கு சாத்​தி​யமில்லை என்​ப​தில் பழனி​சாமி பிடி​வாத​மாக இருந்​தார்.

பாஜக​வின் முன்​னெடுப்​பால் டிடிவி தினகரனை மட்​டும் ஏற்​றுக்​கொண்​டார். ஓபிஎஸ், ஆர்​.​வைத்​திலிங்​கம், மனோஜ் பாண்​டியன் ஆகியோர் திமுக​வில் ஐக்​கிய​மா​யினர். அதே​நேரம், கூட்​ட​ணிக்​குள் பாமகவை கொண்​டு​வந்த பழனி​சாமியால் பாமக​வில் அன்​புமணி - ராம​தாஸ் இடையே நில​விய பிளவை சரிசெய்ய முடிய​வில்லை.

தேமு​திகவை கூட்​ட​ணி​க்குள் கொண்டுவருவதையும் தவற​விட்​டது. முதற்​கட்​ட​மாக பழனி​சாமி அறி​வித்த வேட்​பாளர் பட்​டியலில் 23 பேர் இடம்​பெற்​றிருந்​தனர். இவர்​களில் பெரும்​பாலானோர் தெற்​கில், கொங்கு மண்​டலத்​தில் மற்​றும் வட மாவட்​டங்​களில் வலு​வாக இருக்​கும் முக்​கிய சமூகத்​தின​ராகவே இருந்​தனர்.

ஜெயலலிதா காலத்​தில், அதிக அளவில் மாநக​ராட்சி மாமன்ற உறுப்​பினர்​கள், ஒன்​றிய செய​லா​ளர்​களுக்கு வாய்ப்பு வழங்​கப்​பட்​டது போன்று இப்​போது வழங்​காததும், தொண்​டர்​கள் மத்​தி​யில் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யது.

இத்​தகைய காரணங்​களாலேயே இந்​தத் தேர்​தலில் அதி​முக வெற்றி வாய்ப்பை இழந்​ததோடு, அக்​கூட்​டணி 3-ம் இடத்​துக்கு செல்​லும்​ நிலை ஏற்​பட்​டு​விட்​ட​தாக அதி​முக வட்​டாரங்​கள்​ தெரிவிக்​கின்​றன.

SCROLL FOR NEXT