தமிழகம்

அதிமுக பொதுக்குழு நாளை சென்னையில் கூடுகிறது

செய்திப்பிரிவு

சென்னை: அதி​முக பொதுக்​குழு கூட்​டம் பழனிசாமி தலை​மை​யில் சென்​னை​யில் நாளை நடை​பெற உள்​ளது. இதில் கூட்​ட​ணி, கட்சி ஒருங்​கிணைப்பு உள்​ளிட்ட முக்​கியதீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தமிழக சட்​டப்​பேர​வை தேர்தல் நெருங்கும் நிலையில் சென்னை வானகரத்​தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அதி​முக பொதுக்​குழு மற்​றும் செயற்​குழுகூட்​டம் நாளை (டிச.10) நடை​பெறுகிறது. இதில், சட்​டப்​பேர​வைத் தேர்​தல் குறித்​தும், திமுக அரசுக்கு எதி​ராக பிரச்​சா​ரங்​களை முன்​னெடுப்​பது குறித்​தும் பல அறி​விப்​பு​கள் வெளி​யிடப்பட உள்​ளன.

இதுதொடர்​பாக முக்​கிய தீர்​மானங்​களும் நிறைவேற்​றப்பட இருக்​கின்​றன. அதே​போல், அதி​முக ஒருங்​கிணைப்பு குறித்து முக்​கிய முடிவு​கள் எடுக்க இருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது. அதேநேரம் அதி​முக ஒருங்​கிணைப்பு குறித்து முடிவு எடுக்​கப்​ப​டா​விட்​டால், வரும் 15-ம் தேதிக்​குப் பிறகு ஓபிஎஸ், தனது அரசி​யல் பயணம் குறித்து முக்​கிய முடிவை அறி​விப்​பார்​ என்றும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT