சைபர் குற்​றப்​பிரிவு கூடுதல் டிஜிபி சந்​தீப் மிட்டல்

 
தமிழகம்

சைபர் போர்ட்டலில் எப்ஐஆர் எண்ணிக்கையில் முரண்பாடு: சரிசெய்ய கூடுதல் டிஜிபி அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: சைபர் குற்​றங்​கள் தொடர்​பான மாநில போர்ட்​டலிலும் காவல் நிலைய போர்ட்​டலிலும் பதி​வான முதல் தகவல் அறிக்கை எண்​ணிக்​கை​யில் முரண்​பாடு காணப்பட்​ட​தால் அதை சரிசெய்ய மாநகர, மாவட்ட சைபர் கிரைம் பிரிவு அதி​காரி​களுக்கு சைபர் குற்​றப்​பிரிவு கூடு​தல் டிஜிபி சந்​தீப் மிட்​டல் உத்​தர​விட்​டுள்​ளார்.

நாடு​முழு​வதும் நாள்​தோறும் புதுப்​புது வகை​யில் சைபர் கிரைம் குற்​றங்​கள் அரங்​கேறி வரு​கின்​றன. இதுதொடர்​பான புகார்​கள் வரும்​போது மாநகரம், மாவட்​ட சைபர் குற்​றப்​பிரிவு விசா​ரித்து நடவடிக்கை எடுக்கிறது.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் மாநில சைபர் குற்ற போர்ட்​டலில் குறிப்​பிட்​டுள்ள முதல் தகவல் அறிக்கை எண்​ணிக்​கைக்​கும் காவல்​நிலைய சைபர் குற்ற போர்ட்​டலில் குறிப்​பிட்​டுள்ள முதல் தகவல் அறிக்கை எண்​ணிக் ​கைக்​கும் முரண்​பாடு உள்​ளது.

குறிப்​பாக கடந்த ஏப்​ரல் முதல் அக்​டோபர் வரை மாநில சைபர் குற்ற போர்ட்​டலில் 1,626 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. ஆனால் காவல் நிலைய சைபர் போர்ட்​டலில் 1,246 வழக்​கு​கள் பதி​வாகி​யுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்நிலையில் மாநில சைபர் குற்​றப்​பிரிவு கூடு​தல் டிஜிபி சந்​தீப் மிட்​டல் மாநகர, மாவட்ட சைபர் கிரைம் பிரிவு அதி​காரி​களுக்கு சுற்​றறிக்கை ஒன்றை அனுப்பி உள்​ளார்.

அதில், கூறி​யிருப்ப​தாவது: அனைத்து காவல் நிலைய சைபர் கிரைம் போலீ​ஸாரும் சைபர் மோசடி​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் அளிக்​கும் புகாரில் முறை​யாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதனை‌ மாநில மற்​றும் காவல் நிலைய சைபர் போர்ட்​டலில் பதிவேற்​றம் செய்ய வேண்​டும்.

சில காவல் நிலை​யத்​தில் புகாரை பெற்று சிஎஸ்​ஆர் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வழக்கை முடித்து வைப்​ப​தாக தெரி​கிறது. இதனால் எண்​ணிக்​கை​யில் முரண்​பாடு ஏற்​படுகிறது.

எனவே சிஎஸ்​ஆர் அளித்த வழக்​கில் கண்​டிப்​பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்​டும். இந்த முரண்​பாடு​களை ஒரு வாரத்​துக்​குள் சரிசெய்ய வேண்​டும்.

SCROLL FOR NEXT