தமிழகம்

அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடிகை கவுதமியிடம் 2 மணி நேர விசாரணை

தொழிலதிபர் ரூ.25 கோடி நிலம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு

செய்திப்பிரிவு

சென்​னை: பிரபல தமிழ் திரைப்பட நடிகை கவுதமி​யின் ரூ.25 கோடி நிலம் மோசடி செய்​யப்​பட்ட வழக்​கில், அமலாக்​கத் துறை அலு​வல​கத்​தில் அவரிடம் சுமார் 2 மணி நேரம் அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர்.

நடிகை கவுதமி கடந்த 2023-ம் ஆண்டு சென்னை காவல் ஆணை​யர் அலவல​கத்​தில் உள்ள மத்​திய குற்​றப்​பிரி​வில் புகார் ஒன்று அளித்​திருந்​தார்.

அதில் தனது குடும்ப நண்​ப​ரான வேளச்​சேரியைச் சேர்ந்த அழகப்​பன் என்​பவர், ஸ்ரீபெரும்​புதூரில் தனக்கு சொந்​த​மான ரூ.25 கோடி மதிப்​புள்ள 46 ஏக்​கர் நிலத்​தை, அதன் உண்​மை​யான மதிப்பை மறைத்து ரூ.6 கோடிக்கு விற்​பனை செய்ய வைத்து மோசடி செய்​த​தாக குற்​றம்​சாட்​டி​யிருந்​தார்.

மேலும், புற்​று​நோய் சிகிச்சை மற்​றும் தனது மகளின் எதிர்​கால செல​வு​களுக்​காக நிலத்தை விற்க வேண்​டிய கட்​டாய சூழ்​நிலையை அறிந்​திருந்​தும், அதைப் பயன்​படுத்தி நம்​பிக்கை மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக​வும் அவர் புகாரில் தெரி​வித்​திருந்​தார்.

இந்த புகாரின் அடிப்​படை​யில் மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தினர். தலைமறை​வாக இருந்த அழ

கப்​பன் மற்​றும் அவரது குடும்​பத்​தினரை நீண்ட தேடு​தலுக்​குப் பிறகு கேரள மாநிலம் திருச்​சூரில் கைது செய்​தனர்.

இந்த வழக்​கில் சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் நடை​பெற்​றிருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​ததைத் தொடர்ந்​து, அமலாக்​கத் துறை​யும் பணமோசடி தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் தனி​யாக வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணையை தொடங்​கியது.

6 இடங்​களில் சோதனை

இந்த வழக்கு தொடர்​பாக கடந்த மாதம் 17-ம் தேதி அழகப்​பனுக்கு சொந்​த​மான 6 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் ஒரே நேரத்​தில் சோதனை நடத்​தினர். அப்​போது பல்​வேறு சொத்து ஆவணங்​கள், நிதி பரிவர்த்​தனை தொடர்​பான பதிவு​கள் மற்​றும் முக்​கிய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

அந்த ஆவணங்​களின் அடிப்​படை​யில் விளக்​கம் பெறு​வதற்​காக நடிகை கவுதமிக்கு அமலாக்​கத் துறை சம்​மன் அனுப்​பியது. அதன்​படி அவர் நேற்று சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அமலாக்​கத் துறை அலு​வல​கத்​தில் ஆஜரா​னார்.

அப்​போது, ஏற்​கெனவே கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள், சொத்து பரிவர்த்​தனை விவரங்​கள், பணப் பரி​மாற்​றங்​கள் மற்​றும் வழக்​கின் பின்​னணி தொடர்​பாக அதி​காரி​கள் அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசா​ரணை நடத்​தினர்.

இந்த விசா​ரணை​யின்​போது வழக்​கின் அடுத்​தகட்ட விசா​ரணைக்கு உதவும் வகை​யில் பல முக்​கிய தகவல்​கள் கிடைத்​த​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

கருத்து தெரிவிக்கவில்லை

விசா​ரணை முடிந்து அமலாக்​கத் துறை அலு​வல​கத்​திலிருந்து வெளியே வந்த நடிகை கவுதமி​யிடம் நிருபர்​கள் கருத்து கேட்​ட​போது, ``வழக்கு விசா​ரணை​யில் இருப்​ப​தால் தற்​போது எது​வும் கூற முடி​யாது; பின்​னர் பேசுகிறேன்'' என்று மட்​டும் கூறி​விட்டு அங்​கிருந்து புறப்​பட்​டுச் சென்​று​விட்​டார்.

இந்த வழக்​கில் அமலாக்​கத் துறை சேகரித்​து வரும்​ ஆ​தா​ரங்​களின்​ அடிப்​படை​யில்​, மேலும்​ சிலரிட​மும்​ வி​சா​ரணை நடத்​தப்​படலாம்​ என்​று அதி​காரி​கள்​ தரப்​பில்​ கூறப்​படு​கிறது. இது ஒரு​புறம்​ இருக்​க இந்​த வழக்​கு தொடர்​​பாக கவுதமி​யிடம்​ ஏற்​கெனவே வி​சா​ரணை நடத்​தப்​பட்​டிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT