தமிழகம்

அண்ணா நகரில் அதிநவீன ஆதார் சேவை மையம் திறப்பு

செய்திப்பிரிவு

சென்னை: பு​திய பிரத்​யேக ஆதார் சேவை மையம் சென்னை அண்ணா நகரில் நேற்று திறக்​கப்​பட்​டது. நாளொன்​றுக்கு 1000 பேருக்கு இந்த மையம் மூலம் சேவை வழங்​கப்​பட​வுள்​ளது.

சென்னை அண்ணா நகர் கிழக்​கில் உள்ள தமிழ்​நாடு நகர்ப்​புற உட்​கட்​டமைப்பு நிதிச் சேவை​கள் நிறுவன கட்​டிடத்​தில் புதிதாக ஆதார் சேவை மையம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்​தது. தமிழ்​நாடு மின்​-ஆளுமை முகமை இயக்​குநர் மற்​றும் தலைமை செயல் அலு​வலர் ஆல்பி ஜான் வர்​கீஸ் கலந்​து​கொண்டு மையத்​தைத் திறந்து வைத்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில், இந்​திய தனித்​துவ அடை​யாள ஆணை​யம் (UIDAI) பெங்​களூரு மண்டல துணை இயக்​குநர் ஆனி ஜாய்​ஸ், இயக்​குநர் பவன் குமார் பாவா உள்ளிட்ட பலர் பங்​கேற்​றனர்.

மொத்​தம் 16 சேவை கவுன்ட்​டர்​கள் மற்​றும் 30-க்​கும் மேற்​பட்ட பணி​யாளர்​கள் உள்​ளனர். தினசரி 500 பேருக்கு ஆன்​லைன் முன்​ப​திவு மூல​மாக​வும், 500 பேருக்கு நேரடி​யாக டோக்​கன்​கள் வழங்​கப்​பட்​டும் என 1,000 பேருக்கு சேவை வழங்​கப்பட இருக்​கிறது.

SCROLL FOR NEXT