தமிழகம்

பணி ஆணை வழங்கப்படாததால் டிஎம்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு 751 மருத்துவர்கள் போராட்டம்

சுகாதாரத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் தீர்வு

செய்திப்பிரிவு

சென்னை: ​​தி​முக ஆட்​சி​யில் தேர்ந்​தெடுக்​கப்​பட்டு பணி நியமன ஆணை வழங்​கப்​ப​டாத 751 மருத்துவர்கள் சென்னை டிஎம்​எஸ் அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்டு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தமிழகத்​தில் அரசு மருத்​து​வ​மனை​களில் காலி​யாக​வுள்ள 1,100 உதவி மருத்​து​வர்​கள் பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான அறி​விப்​பை, தமிழ்​நாடு மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் (எம்​ஆர்​பி) கடந்த 2025-ம் ஆண்டு நவம்​பர் 21-ம் தேதி வெளி​யிட்​டது.

இதற்​கான தேர்வு கடந்த ஜனவரி 25-ம் தேதி நடந்​தது. விண்​ணப்​பித்​திருந்த 25,172 பேரில் 20,867 பேர் தேர்​வில் பங்​கேற்​றனர். அவர்​களில் 16,986 பேர் தேர்ச்சி பெற்​றனர். தேர்ச்சி பெற்​றவர்​களின் சான்​றிதழ்​கள் சரி​பார்ப்​பு, இட ஒதுக்​கீடு முறை​யில் 1,071 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர்.

இவர்​களை கலந்​தாய்வு மூலம் பணி​யில் சேர்ப்​ப​தற்​கான பணி​கள் நடந்​தன. 320 பேருக்கு ஆணை வழங்​கப்​பட்​டது. பின் காலி​யிடங்​கள் இல்லை என 751 பேருக்கு பணி ஆணை வழங்​கப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில் முதல்​வர் விஜய் தலை​மையி​லான புதிய ஆட்சி வந்​துள்​ள​தால், ஏற்​கெனவே ஆவணங்​கள் சரி​பார்க்​கப்​பட்​டு, தேர்வு செய்​யப்​பட்ட 751 பேருக்​கும் பணி நியமன ஆணை வழங்க வேண்​டும் என மருத்​து​வர்​கள் சென்னை தேனாம்​பேட்​டை​யில் உள்ள டிஎம்​எஸ் அலு​வல​கத்தை நேற்று முற்​றுகை​யிட்​டனர்.

அவர்​களு​டன் அரசு அதி​காரி​கள் நடத்​திய பேச்​சு​வார்த்தை உடன்​பாடு ஏற்​ப​டாத​தால், தலை​மைச் செயல​கம் சென்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜை மருத்​து​வர்​கள் சந்​தித்து முறை​யிட்​டனர்.

இது தொடர்​பாக மருத்​து​வர்​கள் கூறுகை​யில், ``இந்த சம்​பவத்தை அதி​காரி​கள் அமைச்​சர் கவனத்​துக்கு எடுத்​துச் செல்​லாமல் இருந்​தனர். நாங்​கள் நடந்​ததை அமைச்​சரிடம் தெரி​வித்​தோம்.

அவர் ஒரு மாதத்​துக்​குள் 370 பேர் வரை பணி நியமனம் செய்​வ​தாக உறு​தி​யளித்​துள்​ளார்​. மற்​றவர்​களும்​ ​காலிப்​பணி​யிடங்​களுக்​கு ஏற்​ப நிரப்​பப்​படு​வர்​ எனத்​ தெரி​வித்​துள்​ளார்​'' என்​றனர்​.

SCROLL FOR NEXT