தமிழகம்

மீஞ்சூரில் ரூ.4,800 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: “மீஞ்​சூரில் தினசரி 400 மில்​லியன் லிட்​டர் கடல் நீரை குடிநீ​ராக்​கும் திட்​டம் ரூ.4,800 கோடி​யில் செயல்​படுத்​தப்​படும்’’ என்று முதல்​வர் விஜய் அறி​வித்​தார்.

சட்​டப்​பேர​வையில் நேற்று 110-வது விதி​யின் கீழ், நகராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை சார்​பில் பல்வேறு அறி​விப்​பு​களை வெளி​யிட்டு முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: வடசென்​னை, ஆவடி, பொன்​னேரி, மீஞ்​சூரில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய, மீஞ்​சூரில் நாளொன்​றுக்கு 400 மில்லியன் லிட்​டர் கடல் நீரை குடிநீ​ராக்கும் திட்​டம் ரூ.4,800 கோடி​யில் செயல்​படுத்​தப்​படும்.

ஆவடி மாநக​ராட்​சி​யில் அனைத்து வீடு​களுக்​கும் 24 மணி நேர​மும் குடிநீர் வழங்க ரூ.500 கோடி​யில் புதிய திட்​டம் செயல்​படுத்​தப்​படும். மதுரை, கடலூர் மாநக​ராட்​சிகள், 9 நகராட்​சிகள், 20 பேரூ​ராட்​சிகளில் குடிநீர் வசதி​களை மேம்​படுத்த ரூ.1,000 கோடி, பழமை​யான 33 கூட்​டுக் குடிநீர் திட்​டங்​களைச் சீரமைக்க முதல்​கட்​ட​மாக ரூ.300 கோடி ஒதுக்​கப்​படும்.

ரூ.410 கோடி​யில் சென்னை கீழ்ப்​பாக்​கம் குடிநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யத்​தின் திறன் அதி​கரிக்​கப்​படும். மதுரை மாநக​ராட்​சி​யில் 40 ஆண்​டு​கள் பழமை​யான பாதாள சாக்​கடை அமைப்பை சீரமைக்க முதல்​கட்​ட​மாக ரூ.2,400 கோடி​யில் நடப்பு ஆண்​டில் பணி​கள் மேற்​கொள்​ளப்​படும்.

நாகர்​கோ​வில் மாநக​ராட்​சி​யில் விடு​பட்ட மற்​றும் புதி​தாக இணைக்​கப்​பட்ட பகு​தி​களி​லும், குன்​றத்​தூர், நந்​திவரம் - கூடு​வாஞ்​சேரி நகராட்​சிகளி​லும் ரூ.960 கோடி​யில் புதிய பாதாள சாக்​கடை திட்​டங்​கள் செயல்​படுத்​தப்படும்.

சென்னை - பெரம்​பூர், கொளத்​தூர், வில்​லி​வாக்​கம், எழும்​பூர் உள்​ளிட்ட பகு​தி​களில் குடிநீர், கழிவுநீர் அமைப்​பு​களை மேம்​படுத்த ரூ.236 கோடி செல​விடப்​படும்.

திருநெல்​வேலி மாநக​ராட்​சி​யில் ரூ.256 கோடியில் 9 மெகா​வாட் திறன் உற்​பத்தி செய்​யும் வகை​யிலும், சேலம் மாநக​ராட்​சி​யில் ரூ.291 கோடி​யில் 10 மெகா​வாட் திறன் உற்​பத்தி செய்​யும் வகை​யிலும் திடக்​கழிவு எரிசக்தி உற்​பத்தி திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படும்.

சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்​க​வும், புதிய சாலைகள் அமைக்​க​வும் சென்னை உட்பட அனைத்து நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​களி​லும் ரூ.1,850 கோடி​யில் பணி​கள் மேற்​கொள்​ளப்​படும்.

வெற்​றித் தமிழகம் தொலை நோக்​குத் திட்​டத்​தின்​படி, ஒருங்​கிணைந்த நகர்ப்​புற மேம்​பாட்டு திட்​ட​மாகச் சென்னை மாநக​ராட்​சி​யில் 45 சதுர கி.மீ. பரப்​பள​வில் 35 கி.மீ. நீளத்​துக்கு சாலைகள், நடை​பாதைகள், பள்​ளி​களைச் சுற்றி 15 கி.மீ. நீளத்​துக்கு குழந்​தைகளின் பாது​காப்பை உறுதி செய்​யும் சாலை வசதி​கள் மற்​றும் 105 சாலை சந்​திப்​பு​களை மேம்​படுத்​தும் பணி​கள் ரூ.110 கோடி​யிலும், பிற மாநக​ராட்​சிகளில் ரூ.165 கோடி​யிலும் மேற்​கொள்​ளப்​படும்.

திருச்​சி, திருப்​பூர், புதுக்​கோட்டை மாவட்​டங்​களில் ரூ.130 கோடி​யில் பெரிய பூங்​காக்​கள், மற்ற மாவட்​டங்​களில் ரூ.175 கோடி​யில் 250 புதிய பூங்​காக்​கள் அமைக்​கப்​படும்.

நகர்ப்​புற உள்​ளாட்​சிப் பள்​ளி​களில் தரமான கல்​வி, பாது​காப்​பான சூழலை உரு​வாக்க புதிய வகுப்​பறை​கள் உள்​ளிட்ட பல்​வேறு உள்​கட்​டமைப்​புப் பணி​கள் ரூ.335 கோடி​யில் மேற்​கொள்​ளப்​படும்.

சிதம்​பரம் நடராஜர் தேரோட்ட விழாவை சிறப்​பாக நடத்​த​வும், பக்​தர்​கள் இடையூறின்றி தரிசனம் செய்​ய​வும், கோயிலைச் சுற்​றி​யுள்ள 4 ரத வீதி​களில் குடிநீர், பாதாள சாக்கடை, மின்சா​ரம், தொலை​தொடர்பு கம்​பிகளைத் தரைக்கு அடி​யில் கொண்டு சென்று வீதி​களை நவீன முறை​யில் சீரமைக்​க​வும் ரூ.36 கோடி​யில் பணி​கள் மேற்​கொள்​ளப்​படும்.

சென்னை மாநக​ராட்​சி​யில் உள்​கட்​டமைப்பு வசதி குறை​வாக உள்ள பகு​தி​களில் சாலை, அடிப்​படை வசதி​களை மேம்​படுத்த ரூ.100 கோடி செல​விடப்​படும். இவ்​வாறு முதல்​வர் விஜய் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT