தமிழகம்

‘உடன்பிறப்பின் குரல்’ தளத்தில் 4.60 லட்சம் கருத்துகள்

செய்திப்பிரிவு

சென்னை: திமுக தலை​வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட எக்ஸ் வலை​தளப் பதி​வு: தேர்​தல் முடிவு​களுக்​கான உண்​மை​யான காரணங்​களை அறிந்​து​கொள்​ளும் நோக்​கில் தொடங்​கப்​பட்ட ‘udanpirapinkural.in’ இணை​யதளத்​தில் இது​வரை 4.60 லட்​சம் கருத்​துகளைப் பெற்​றுள்​ளோம். இந்த இணை​ய தளத்​தின் முக்​கிய நோக்​கமே கட்​சி​யினர் அனை​வரும் எவ்​வித தயக்​க​மும் இல்​லாமல், உங்​கள் மனதில் தோன்​றும் கருத்​துகளைப் பதிவு செய்ய வேண்​டும் என்​பது​தான்.

இதில் நீங்​கள் தெரிவிக்​கும் கருத்​துகள் நேரடி​யாக எனக்கே வந்து சேரும். கட்சி நிர்​வாகி​கள், அனு​தாபிகள், பொது​மக்​கள் என அனை​வரும் அளிக்​கும் ஆலோ​சனை​களை ஆராய்ந்து நம் அடுத்​தகட்ட நடவடிக்​கைகளை திட்​ட​மிடு​வேன். எனவே மே 31-ம் தேதிக்​குள் (இன்​று) உங்​கள் கருத்​து களை மேற்​கண்ட இணை​யதளத்​தில் பதிவு செய்​யுங்​கள்.திமுக மாநிலப் பொறுப்​பாளர்​கள், மாவட்​டச் செய​லா​ளர்​கள் அனை​வரும் இந்த செய்தி அனைத்து உடன்​பிறப்​பு​களை​யும் சென்​றடை​யும் வகை​யில் உங்​களது சமூக வலை​தளப் பக்​கங்​கள், வாட்​ஸ்​அப் குழுக்​களி​லும் பதிவு செய்​ய வேண்டும்.

SCROLL FOR NEXT