நடுக் கடலில் கவிழ்ந்த படகை சக மீனவர்கள் உதவியோடு கயிறு கட்டி இழுத்து வரும் மீனவர்கள்.
விருத்தாசலம்: ‘டிட்வா‘ புயல் காரணமாக கடலூர் பகுதி மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்குச் செல்லவில்லை. மழை சற்றே ஓய்ந்திருந்தாலும் கடல் சீற்றம் வழக் கத்தை விட அதிகமாக இருந்ததுவந்தது.
இந்த நிலையில் கடலூர் தாழங்குடா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ராகவேந்திரன், திவாகர், நடராஜன் ஆகியோர் பைபர் படகு மூலம் நேற்று தாழங்குடாவில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
பிற்பகல் 12 மணி அளவில்கடலில் மீன் பிடித்துக் கொண் டிருந்த போது, சூறாவளிக் காற்றுடன் கடல் சீற்றமாக காணப்பட்ட நிலையில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் கடலில் குதித்த அவர்கள் நீந்தியபடியே 3 பேரும் கரை திரும்பினர். ரூ.1 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலை கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக நீந்தி தப்பி வந்த மீனவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் சக மீனவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மற்றொரு படகு மூலம் நடுக்கடலில் மூழ்கிய படகை மீட்க சென்றனர்.சேதமடைந்த படகை கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர்.
கரையில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கயிறு மூலம் இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.