இலங்கைக்கு சுற்றுலா சென்ற தமிழக பயணிகள் பெருவெள்ளத்தில் சிக்கி தவித்தனர். அவர்களை தனி விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

 
தமிழகம்

இலங்கையில் சிக்கிய 29 பேர் சென்னை வருகை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சேர்ந்த 14 பெண்​கள், குழந்​தைகள் உட்பட 29 பேர் கடந்த நவம்​பர் 25 ம் தேதி 6 நாட்​கள் சுற்​றுலா​வாக சென்​னை​யில் இருந்து ஸ்ரீலங்​கன் ஏர்​லைன்ஸ் விமானத்​தில் இலங்கை சென்​றனர்.

இலங்கை​யில் மழை, வெள்​ளம், நிலச்​சரிவு இருந்​த​தால், 29 பேரும் தங்​கள் பயணத்தை பாதி​யில் முடித்​து​விட்டு விமானம் மூலம் சென்னை திரும்ப முடிவு செய்​தனர்.

ஆனால் விமான சேவை​கள் அனைத்​தும் ரத்து செய்​யப்​பட்டு விட்​ட​தால், இலங்கை​யிலேயே ஒரு கிராம பகு​தி​யில் தங்​கினர்.

இதுபற்றி தகவல் அறிந்​ததும், தமிழக முதல்​வர் நடவடிக்கை எடுத்​ததன் மூலம், இலங்கை​யில் உள்​ள இந்திய தூதரக அதி​காரி​கள் மற்​றும் இலங்​கை​யின் முன்​னாள் கவர்​னர் செந்​தில் தொண்​டை​மான் உடனடி​யாக பாதிக்​கப்​பட்ட தமிழர்​களுக்கு உதவி​களை செய்​தனர்.

அவர்​கள் பாது​காப்​பாக சென்னை திரும்​புவதற்கு நடவடிக்கை எடுத்​தனர். இந்​நிலை​யில், நேற்று இலங்கையில் இருந்து ஸ்ரீலங்​கன் ஏர்​லைன்ஸ் விமானத்​தில் 29 பேரும் சென்னை திரும்​பினர்.

விமான நிலை​யத்​தில் அவர்​கள், இலங்கை​யில் சிக்கி தவித்த எங்​களை பத்​திர​மாக மீட்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்​வருக்கு நன்​றியை தெரி​வித்து கொள்கிறோம் என்​றனர்​.

SCROLL FOR NEXT