முதல்வர் ஸ்டாலின்

 
தமிழகம்

6 துறைகளில் ரூ.3,291 கோடியில் 27 முத்திரைத் திட்டப் பணிகள்

பிப்ரவரிக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர முதல்வர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: சுற்​றுச்​சூழல் வனம், உள்​துறை, பள்​ளிக் கல்​வி, இளைஞர் நலத்​துறை உள்​ளிட்ட 6 துறை​களின் ரூ.3,291 கோடி மதிப்​பிலான 27 முத்​திரைத் திட்​டங்​களை ஆய்வு செய்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பிப்​ர​வரிக்​குள் இந்தப் பணி​களை முடிக்க அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

அரசின் 24 நிர்​வாகத் துறை​களைச் சேர்ந்த ரூ.3 லட்​சத்து 17,693 கோடி மதிப்​பிலான 288 திட்​டங்​கள் முத்​திரைத் திட்​டங்​களாக அடை​யாளம் காணப்​பட்டு அதன் செயல்​பாடு​கள் தொடர்ந்து கண்​காணிக்​கப்​பட்டு வரு​கின்​றன. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்​தினம் நடந்த ஆய்வுக் கூட்டத்​தில், சுற்​றுச்​சூழல், காலநிலை மாற்​றம் மற்​றும் வனம், உள்​துறை, மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்​வை, குறு சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​கள், பள்​ளிக் ​கல்​வி, இளைஞர் நலன் மற்​றும் விளை​யாட்டு மேம்​பாடு, கால்​நடை பராமரிப்​பு, பால்​வளம், மீன்​வளம் மற்​றும் மீனவர் நலன் ஆகிய 6 துறை​களைச் சேர்ந்த ரூ.3,291 கோடி மதிப்​பில் செயல்​பாட்​டில் உள்ள 27 முத்​திரைத் திட்​டங்​களின் பணி முன்​னேற்​றத்தை துறை அதி​காரி​களு​டன் முல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்​தார்.

குறிப்​பாக, இளைஞர் நலன் மற்​றும் விளை​யாட்​டுத் ​துறை சார்​பில் மதுரை மற்​றும் நீல​கிரி​யில் ஒலிம்​பிக் அகாட​மி, செங்​கல்​பட்டு மாவட்ட விளை​யாட்டு மையம் மற்​றும் ராம​நாத​புரத்​தில்தமிழ்​நாடு ஒலிம்​பிக் நீர் விளை​யாட்டு அகாடமி அமைக்​கும் பணி​கள் குறித்தும் ஆய்வு செய்​தார். அப்​போது இப்​பணி​களை வரும் பிப்​ர​வரி மாதத்துக்​குள் முடித்து பயன்​பாட்​டுக்கு கொண்​டுவர அறி​வுறுத்​தி​னார்.

இதுத​விர, சுற்​றுச்​சூழல் மற்​றும் வனத்​துறை சார்​பில், கடம்​பூரில் பல்​லு​யிர் பாது​காப்பு பூங்​கா,மரக்​காணத்​தில் சர்​வ​தேச பறவை மையம், கடலூர் மாவட்​டம் பிச்​சாவரத்​தில் சதுப்​புநில பாது​காப்பு மையம், தஞ்​சாவூரில் சர்​வ​தேச கடல் பசு பாது​காப்பு மையம் மற்​றும் சென்​னை​யில் கடல் ஆமை பாது​காப்பு மையம் அமைக்​கும் பணி​கள்பிப்​ர​வரி 2-வது வாரத்​துக்​குள் அடிக்​கல் நாட்​டப்​பட்​டு, தொடங்​கப்பட வேண்​டும்.

திண்​டுக்​கல்​லில், தேவாங்கு பாது​காப்பு மையம் பிப்​ர​வரிக்​குள் பயன்​பாட்​டுக்கு கொண்டுவர வேண்​டும் என்​றும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்​தரவிட்டார்.

மேலும், பள்​ளிக்​கல்வி துறை​யின் கீழ் கடலூரில் புதிய நூல​கம் அமைக்​கும் ஒப்​பந்​தப்​பணி​களை விரை​வாக முடித்து பிப்​ர​வரிக்​குள் அடிக்​கல் நாட்​டப்​பட்டு பணி​கள் தொடங்க வேண்​டும். கால்நடை பராமரிப்​பு, பால்​வளம், மீன்​வளம் மற்​றும் மீனவர்நலத் துறை​யின்​கீழ், ஆற்​காட்​டுத்துறை, வெள்​ளப்​பள்​ளம் மீன்​பிடிதுறை​முகங்​கள் மற்​றும் திட்​டக்​குடி​யில் புதிய கால்​நடை தீவன ஆலை அமைக்​கும் பணி​களை பிப்​ர​வரிக்​குள் முடிக்க வேண்​டும். பிற முத்​திரைத் திட்​டபணிகளை​யும் விரைந்து முடிக்கமுதல்​வர் அறி​வுறுத்​தி​னார்.

கூட்​டத்​தில், துணை முதல்​வர் உதயநி​தி, தலை​மைச்​செயலர்நா.​முரு​கானந்​தம், துறை செயலர்​கள் சுப்​ரியா சாஹு, மங்​கத்​ராம் சர்​மா, தீரஜ்கு​மார், அதுல் ஆனந்த், த.உதயச்​சந்​திரன், பி.சந்​தரமோகன், சத்​யபிரத சாஹு, ந.சுப்​பையன் மற்​றும் சிட்கோ மேலாண் இயக்​குநர் ஆ.கார்த்​திக் உள்​ளிட்​டோர் பங்கேற்​றனர்.

SCROLL FOR NEXT