அர்ச்சனா பட்நாயக்

 
தமிழகம்

தமிழகம் முழுவதும் 23 ஆயிரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: வாக்​களிப்​ப​தன் அவசி​யம் குறித்​து தமிழகம் முழு​வதும் 23,616 விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகளை நடத்த திட்​ட​மிட்​டுள்​ள​தாக, தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக, அவர் வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலை முன்​னிட்​டு, வாக்​காளர் கல்வி மற்​றும் தேர்​தல் பங்​கேற்பு (SVEEP) திட்​டம் தமிழகம் முழு​வதும் விரி​வாகச் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இதன் நோக்​கம், வாக்​காளர் விழிப்​புணர்வை அதி​கரிப்​பது, தார்​மீக அடிப்​படையி​லான வாக்​களிப்பை ஊக்​கு​விப்​பது மற்​றும் சமூகத்​தின் அனைத்​துப் பிரி​வினரிடையே முழு​மை​யான தேர்​தல் பங்​கேற்பை உறுதிசெய்​வ​தாகும்.

          

மாவட்ட தேர்​தல் அதி​காரி​கள் மற்​றும் தேர்​தல் நடத்​தும் அதி​காரி​கள் சட்​டமன்ற தொகு​தி​கள் அளவில் இந்த முன்​னெடுப்​பு​களைத் தீவிர​மாக செயல்​படுத்தி வரு​கின்​றனர். மாநிலம் முழு​வதும் பல்​வேறு விழிப்​புணர்வு நடவடிக்​கைகள் பெரிய அளவில் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. பெரிய அளவில் 1,486, சிறிய அளவில் 22,130 நிகழ்ச்​சிகள் என மொத்​தம், 23,616 நிகழ்ச்​சிகளை நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

நேர்மையான வாக்களிப்பு: பெரிய அளவி​லான நிகழ்ச்​சிகளில் மாரத்​தான் போட்​டிகள், மனிதச் சங்​கி​லிகள், வாக்​காளர் உறு​தி​மொழிப் பிரச்​சா​ரங்​கள் மற்​றும் கல்​லூரி​களில் உள்ள தேர்​தல் எழுத்​தறிவு சங்​கங்​ களின் செயல்​பாடு​கள் ஆகியவை அடங்​கும். கூடு​தலாக, ஒவ்​வொரு மாவட்​ட​மும் அதன் கலாச்​சார அடை​யாளத்​தைப் பிர​திபலிக்​கும் வகை​யில், தனித்​து​வ​மான சின்​னங்​களை உரு​வாக்​கி, அவற்​றின் மூலம் வாக்​காளர் விழிப்​புணர்வு செய்​தி​களைத் திறம்​படப் பரப்பி வரு​கின்​றன.

இந்​நிகழ்ச்​சிகளில், வாக்​களிப்​ப​தன் முக்​கி​யத்​து​வம், நேர்​மை​யான வாக்​களிப்பு முறை​கள், வாக்​காளர் வசதிக்​கான நடவடிக்​கைகள், இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யத்​தின் சிறப்பு முயற்​சிகள் குறித்து விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​படு​கிறது. மேலும், அனை​வரை​யும் உள்​ளடக்​கிய பங்​கேற்பை உறுதி செய்​யும் வகை​யில், முதல்​முறை வாக்​காளர்​கள், மாற்​றுத் திற​னாளி​கள், முதி​யோர்​கள், இதர நலிந்த பிரி​வினர்​களை குறிவைத்து தற்​போது மேற்​கொள்​ளப்​பட்டு வரும் இம்​முயற்​சிகள், மாநிலத்​தில் சுதந்​திர​மான, நியாய​மான, அனை​வரை​யும் உள்​ளடக்​கிய தேர்​தலை நடத்​து​வதற்​கான உறு​தியை அளிக்​கிறது என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT