தமிழகம்

ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை திருட முயன்ற வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஏடிஎம் இயந்​திரத்​தில் பணம் வரும் பகு​தி​யில் இரும்பு தகட்டை வைத்​து, வாடிக்​கை​யாளர்​கள் பணத்தை நூதன முறை​யில் திருட முயன்ற வடமாநில இளைஞர்​கள் இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர்.

சென்​னை, வியாசர்​பாடி, பல்​லவா 3-வது தெரு​வில் வங்கி ஏடிஎம் மையம் ஒன்று உள்​ளது. இங்​குள்ள ஏசி இயந்​திரம் பழுதடைந்​த​தால் அதனை சரி செய்​வதற்​காக, நேற்று‌ முன்​தினம் மாலை சம்​பந்​தப்​பட்ட வங்கி அனுப்​பிய ஊழியர்​கள் இரு​வர் வந்​தனர்.

          

அப்​போது, ஏடிஎம் இயந்​திரத்​தில் பணம் வரும் பகு​தி​யில் மெல்​லிய இரும்பு தகடு கொண்டு அடைத்து வைத்​திருந்​ததை பார்த்த அவர்​கள், ஏடிஎம் வெளியே சந்​தேக நபர்​கள் யாரேனும் உள்​ளார்​களா என நோட்​ட​மிட்​டனர்.

அப்​போது, அங்கு சந்​தேகத்​திற்​கிட​மான முறை​யில் நின்​றிருந்த இரு​வர் சிறிது நேரம் கழித்து ஏடிஎம் மையத்​திற்கு வந்து பணம் எடுப்​பது போல் நடித்​ததை பார்த்து சந்​தேகமடைந்த ஊழியர்​கள் இது தொடர்​பாக காவல்​துறைக்கு தகவல் தெரி​வித்​ததோடு, அவர்​களை பிடித்து வைத்​துக் கொண்​டனர். வியாசர்​பாடி போலீ​ஸார் சம்பவ இடத்து வந்து அந்த நபர்​களிடம் விசா​ரித்​தனர்.

அவர்​கள் உத்​திரபிரதேச மாநிலம், கான்​பூர் மாவட்​டத்தை சேர்ந்த வீரபகதூர் (23), அமர்​சிங் (30) என்​பதும், இவர்​கள் கடந்த 20 நாட்​களுக்கு முன்பு சென்னை வந்து வால்​டாக்ஸ் சாலை​யில் அறை எடுத்து தங்கி இருந்​ததும் தெரிந்​தது.

மேலும், இவர்​கள் சென்​னை​யில் உள்ள எஸ்​பிஐ ஏடிஎம் மையத்தை நோட்​ட​மிட்டு ஏடிஎம் இயந்​திரத்​தில் பணம் வரும் பகு​தி​யில் தகடு வைத்து தடுத்​து, பணம் எடுக்க வரும் வாடிக்​கை​யாளர்​கள் பணம் வரவில்லை என நினைத்து திரும்பி சென்ற உடன் தகடை அகற்றி பணத்தை திருடி செல்ல திட்​ட​மிட்​டதும் தெரிய​வந்​தது.

இதையடுத்​து, போலீ​ஸார் இரு​வரை​யும் கைது செய்​தனர். அவர்​களிட​மிருந்து பணம் மற்​றும் தகடு, டேப் ஆகிய​வை பறி​முதல் செய்​யப்​பட்​டது. இவர்​கள் வேறு எங்​கேனும் இது போன்று கைவரிசை காட்​டி​யுள்​ளனரா என்ற கோணத்​தில்​ தொடர்ந்​து வி​சா​ரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT