சென்னை உயர் நீதி​மன்​றம்

 
தமிழகம்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள 15 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்பு

தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்

செய்திப்பிரிவு

சென்னை: உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகளும் இன்று பதவி ஏற்கின்றனர். அவர்களுக்குத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு மொத்​த​ம் 75 நீதிபதி பணி​யிடங்​கள் உள்​ளன. இவற்​றில் தற்​போது தலைமை நீதிப​தி​யுடன் சேர்த்து 51 பேர் பணி​யில் உள்​ளனர். காலி​யாக உள்ள நீதிபதி பணி​யிடங்​களை நிரப்ப நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது. அதன்​படி, உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் 10 பேரை​யும், மாவட்ட முதன்மை நீதிப​தி​களாக உள்ள 9 பேரை​யும் உயர் நீதி​மன்ற நீதிப​தி​களாக நியமிக்க மத்​திய அரசுக்கு உச்ச நீதி​மன்ற கொலீஜி​யம் பரிந்​துரை செய்​தது.

இந்​நிலை​யில், முதல்​கட்​ட​மாக இந்தப் பட்​டியலில் இடம்பெற்​றுள்ள கே.கோ​விந்​த​ராஜன், ரஜினிஷ் பதி​யால், என்​. ரமேஷ், ஜி.கே.​முத்​துக்​கு​மார், ஆர்​.​ராஜேஷ் விவே​கானந்​தன் ஆகியோரை உயர் நீதி​மன்ற நிரந்தர நீதிப​தி​களாக​வும், எஸ்​.ர​வீக்​கு​மார், என். திலீப்​கு​மார், இ.மனோகரன், டாக்​டர் பி.​முரு​கன், எம்​.டி.சும​தி, எஸ்​.அல்​லி, சி.​திரு​மகள், எஸ்​.​கார்த்​தி​கேயன், பி.​முரு​கேசன், என்​.குணசேகரன் ஆகிய 10 பேரை கூடு​தல் நீதிப​தி​களாக​வும் நியமித்து குடியரசுத் தலை​வர் நேற்று முன்​தினம் உத்​தர​விட்​டார்.

இதைத் தொடர்ந்து புதிய நீதிப​தி​கள் பதவி​யேற்பு நிகழ்ச்​சி, சென்னை உயர் நீதி​மன்ற கலை​யரங்​கில் இன்று (ஆக.9) மதி​யம் 1.35 மணி அளவில் நடை​பெறுகிறது. இதில் புதிய நீதிப​தி​களுக்கு உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி பதவிப்​பிர​மாணம் செய்து வைக்​கிறார். பதவி​யேற்பு விழா​வில் சட்​டத்​துறை அமைச்​சர், உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள், மத்​திய, மாநில அரசு வழக்​கறிஞர்​கள், வழக்​கறிஞர்​கள் சங்க நிர்​வாகி​கள், தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சில் பிர​தி​நி​தி​கள் உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர்.

இதற்கு முன்​பாக கடந்த 2016-ம் ஆண்டு அக்​டோபரில் அப்​போதைய தலைமை நீதிபதி எஸ்​.கே.க​வுல் 15 நீதிப​தி​களுக்கு பதவிப்​பிர​மாணம் செய்து வைத்​தார். அதன்​பிறகு இப்​போது ஒரே நேரத்​தில் அதிக எண்​ணிக்​கை​யில் நீதிப​தி​கள் பதவி​யேற்​கின்​றனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இதன்​மூலம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பணி​யில் உள்ள நீதிப​தி​களின் எண்​ணிக்கை 66 ஆக உயர்ந்​து, காலி​யிடங்​களின் எண்​ணிக்கை 9 ஆக குறைந்​துள்​ளது.

முதல்​வர் விஜய் வாழ்த்து: முதல்​வர் விஜய் தனது சமூக வலைதளப் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்குப் புதிய நீதிப​தி​களாக நியமிக்​கப்​பட்​டுள்ள வழக்​கறிஞர்​கள் கே.கோ​விந்​த​ராஜன், ரஜினிஷ் பதி​யில், என்​.ரமேஷ், ஜி.கே.​முத்​துக்​கு​மார், ஆர். ராஜேஷ் விவே​கானந்​தன், எஸ்​,ரவிக்​கு​மார், என்​.​திலீப்​கு​மார், இ.மனோகரன் ஆகியோ​ருக்​கும், மாவட்ட முதன்மை நீதிப​தி​களாக இருந்து உயர் நீதி​மன்ற நீதிப​தி​களாக நியமிக்​கப்​பட்​டுள்ள டாக்​டர் பி.​முரு​கன், எம்​.டி.சும​தி, எஸ்​.அல்​லி,சி.​திரு​மகள், எஸ்​.​கார்த்​தி​கேயன், பி.​முரு​கேசன், என்​.குணசேகரன் ஆகியோ​ருக்​கும் எனது மனமார்ந்த வாழ்த்​துகளை தெரி​வி்த்​துக் கொள்​கிறேன்.

நீதி​யின் மாண்​பை​யும், அரசி​யலமைப்​பின் விழு​மி​யங்​களை​யும் நிலை​நாட்​டி, மக்​கள் அனை​வருக்​கும் சம நீதி​யும், சமூக நீதி​யும் கிடைக்​கச் செய்​யும் வகை​யில்​ தங்​களது பணி சிறக்​கட்​டும்​. இவ்​வாறு முதல்​வர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT