மேட்டூர் அணை
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து கடந்த 1-ம் தேதி முதல் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. முதலில் விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக இருந்தநீர் திறப்பு, நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு நேற்று காலை முதல் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 9,709 கனஅடியில் இருந்து, நேற்று விநாடிக்கு 9,512 கனஅடியாக குறைந்தது.
எனினும், பாசனத்துக்கான நீர் திறப்பு நேற்று முன்தினம் வரை குறைவாக இருந்ததால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 92.33 அடியில் இருந்து, நேற்று 92.37 அடியாக அதிகரித்தது. இதேபோல், அணையின் நீர் இருப்பு 55.35 டிஎம்சி-யில் இருந்து நேற்று 55.40 டிஎம்சி-யாக உயர்ந்தது.