கோப்புப் படம்

 
தமிழகம்

பொதுமக்கள், பயணிகளின் வசதிக்காக சென்னை ரயில்வே கோட்டத்தில் 11 புதிய நடைமேம்பாலங்கள்

செய்திப்பிரிவு

சென்னை: பொதுமக்கள், பயணி​களின் வசதிக்​காக, சென்னை ரயில்வே கோட்​டத்​தில் கடந்த நிதி​யாண்​டில், 11 புதிய நடைமேம்​பாலங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இது குறித்​து, சென்னை ரயில்வே கோட்​டம் வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு: பயணி​கள் பாது​காப்பை வலுப்​படுத்​து​வ​தி​லும், ரயில் நிலைய உள்​கட்​டமைப்பை மேம்​படுத்​து​வ​தி​லும் ஒரு முக்​கிய நடவடிக்​கை​யாக, தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்​டம், 2025-26-ம் நிதி​யாண்​டில் சென்னை கோட்​டத்​துக்கு உட்​பட்ட ரயில் நிலை​யங்​களில், பயணி​கள் தண்​ட​வாளங்​களைக் கடக்​கும் ஆபத்​தான முறையைத் தவிர்க்க புதிய நடைமேம்​பாலங்​கள் அமைக்​கப்​படு​கின்​றன.

அந்த வகை​யில், கடந்த நிதி​யாண்​டில், 11 புதிய நடைமேம்​பாலங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த நடைமேம்​பாலங்​களில் ஒன்று ‘அம்​ரித் ரயில் நிலை​யத் திட்​டத்​தின்’ கீழ் கட்​டப்​பட்​டுள்​ளது.

இந்த ஆண்​டின் முக்​கிய சிறப்​பம்​ச​மாக, 2026-ம் ஆண்டு மார்ச்​சில் திருத்​தணி ரயில் நிலை​யத்​தின் 12 மீட்​டர் அகல​முள்ள பிரம்​மாண்​ட​மான நடைமேம்​பாலம் பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டது.

அதிக அளவி​லான பயணி​களைக் கையாளும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்ள இந்த மேம்​பாலம், குறிப்​பாக, கூட்ட நெரிசல் அதி​க​முள்ள நேரங்​களி​லும், திரு​விழாக் காலங்​களி​லும் பயணி​கள் தடை​யின்றி பாது​காப்​பாகச் செல்ல உதவு​கிறது.

இதே​போல், பயணி​கள் நடமாட்​டம் அதி​க​முள்ள வாலாஜா​பாத், திரு​மால்​பூர் மற்​றும் அன்​வர்​தி​கன்​பேட்டை ஆகிய நிலை​யங்​களி​லும் புதிய நடைமேம்​பாலங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

சித்​தேரி, முகுந்​த​ராயபுரம், பூடி, வேப்​பகுண்​டா, பொன்​பாடி மற்​றும் பாலூர் ஆகிய நிலை​யங்​களி​லும் புதிய நடைமேம்​பாலங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இவை முதி​ய​வர்​கள் மற்​றும் சுமை தூக்​கிச் செல்​லும் பயணி​கள் உள்​ளிட்ட அனைத்து தரப்​பினரும் தண்​ட​வாளங்​களைக் கடக்​காமல் பாது​காப்​பாக நடைமேடைகளுக்​குச் செல்ல வழி​வகை செய்​கின்​றன.

வரும் காலங்​களில், மாற்​றுத்​திற​னாளி​களுக்​கான வசதி​கள் (Divyangjan-friendly features) உள்​ளிட்ட கூடு​தல் வசதி​கள் மேம்​படுத்​தப்​படும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT