இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்கள்.
காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டம் காசாக்குடிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவருக்குச் சொந்தமான படகில் ராஜா(39) மற்றும் காசாக்குடிமேடு, காரைக் கால்மேடு கிராமங்களைச் சேர்ந்த ஜான்சினா(18), சந்திரநாத்(35), செல்வமணி(58), முருகன்(34), பிரதீப்(39), சக்திவேல்(34), ரஞ்சித்(37), வேலாயுதம்(50), மதியழகன்(43), மோகன்ராஜ்(51) ஆகியோர் டிச.29-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி ராஜா உள்ளிட்ட மீனவர்கள் 11 பேரையும் கைது செய்த துடன், படகையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட் டனர்.