விளையாட்டு

‘ஐசிசி நெருக்கடிக்கு அடிபணிய மாட்டோம்’ - வங்கதேச அரசின் விளையாட்டு ஆலோசகர்

செய்திப்பிரிவு

டாக்கா: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்கு​கிறது. 20 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடரில் வங்கதேச அணி ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. அந்த அணி பங்​கேற்​கும் லீக் ஆட்​டங்​கள் கொல்​கத்​தா, மும்பையில் நடை​பெறுகின்றன.

இந்​நிலை​யில் இந்​தி​யா​வில் தங்​களது அணிக்கு பாது​காப்பு இருக்​காது என்​றும் அதனால் டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் வங்​தேசம் விளை​யாடும் போட்​டிகளை இலங்​கைக்கு மாற்ற வேண்​டும் என ஐசிசி-​யிடம் வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் கோரிக்கை வைத்​தது. ஆனால் வங்​கதேசத்​தின் குற்​றச்​சாட்டு மீது எந்​தவித உண்மை​யும் இல்​லை. வங்​கதேச அணிக்கு இந்​தியா​வில் எந்​த​வித பாது​காப்பு அச்​சுறுத்​தலும் இல்லை என ஐசிசி தெரி​வித்​தது. ஆனால் டி 20 உலகக் கோப்​பை​யில் விளை​யாடு​வதற்​காக இந்​தியா செல்​ல​மாட்​டோம். எங்​கள் அணி பங்​கேற்​கும் ஆட்​டங்​களை இலங்​கை​க்கு மாற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

          

ஆனால் ஐசிசி தரப்​பில் போட்டி தொடங்​கு​வதற்கு சில வாரங்​களே உள்​ள​தால் அட்​ட​வணை, பயண விவரங்​களை மாற்ற முடி​யாது என தெரிவிக்​கப்​பட்​டது. மேலும் இன்​றைக்​குள் (21-ம் தேதி) டி 20 உலகக் கோப்​பை​யில் பங்கேற்பது குறித்து முடிவு செய்து அறிவிக்க வேண்​டும் எனவும் இல்​லை​யென்​றால் மாற்று அணி​யாக ஸ்காட்லாந்து சேர்க்​கப்​படும் எனவும் ஐசிசி தரப்​பில் எச்சரிக்கை விடுக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் வங்​கதேச அரசின் விளை​யாட்​டுத் துறை ஆலோ​சகர் ஆசிஃப் நஸ்​ருல் கூறும்​போது, “டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் வங்​கதேசத்​துக்​குப் பதிலாக ஸ்காட்​லாந்து மாற்று அணி​யாக சேர்க்​கப்​படுமா என்​பது எனக்​குத் தெரிய​வில்​லை.

பிசிசிஐ தரும் அழுத்தத்தின் காரண​மாக ஐசிசி எங்​களுக்கு அழுத்​தம் தர முயற்​சித்​தால் நாங்​கள் அதற்கு அடிபணிய மாட்​டோம். எந்த ஒரு காரண​முமின்றி ஐசிசி வைக்​கும் நிபந்தனைகளை நாங்​கள் ஏற்​றுக்​கொள்ள மாட்​டோம்.

கடந்த காலங்​களில் பாகிஸ்​தான் அணி இந்​தி​யா​வில் கிரிக்​கெட் போட்​டிகளில் விளை​யாட மாட்​டோம் எனக் கூறிய​தால், போட்டி நடத்​தப்​படும் இடங்​களை ஐசிசி மாற்றியது. தர்க்​கரீ​தி​யான அடிப்​படை​யில் மைதானத்தை மாற்​று​மாறு நாங்​கள் கேட்​டுள்​ளோம், மேலும் நியாயமற்ற அழுத்​தத்​தைக் கொடுத்து இந்​தி​யா​வில் விளை​யாடு​மாறு எங்​களை வற்​புறுத்​த முடி​யாது” என்​றார்​.

SCROLL FOR NEXT