விளையாட்டு

“வைபவ் சூர்யவன்ஷி எனது புதிய பேவரைட் வீரர் ஆகியுள்ளார்” - பாட் கம்மின்ஸ் பகிர்வு

வேட்டையன்

ஜெய்ப்பூர்: ராஜாஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, தனது புதிய பேவரைட் வீரர் ஆகியுள்ளார் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 8 இன்னிங்ஸில் 357 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதம் அடங்கும். இந்த சீசனில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் முன்னணி பவுலர்கள் பந்து வீச்சை துவம்சம் செய்து வருகிறார். இதில் பும்ரா, ஹேசில்வுட், கம்மின்ஸ் உள்ளிட்டோர் அடங்குவர்.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உடனான ஆட்டத்தில் 37 பந்துகளில் 103 ரன்களை வைபவ் சூர்யவன்ஷி எடுத்திருந்தார். ஐபில் கிரிக்கெட்டில் இது அவரது இரண்டாவது சதம் ஆகும். இந்த ஆட்டத்தில் 229 ரன்கள் இலக்கை 18.3 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்தது. இந்த ஆட்டத்துக்கு பிறகு இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து கம்மின்ஸ் கூறியதாவது:

“எனது புதிய பேவரைட் வீரராக வைபவ் சூர்யவன்ஷி ஆகியுள்ளார் என நான் நினைக்கிறேன். அவர் பந்தை அடித்து துவம்சம் செய்கிறார். அதை பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. அவருக்கு எதிராக பந்து வீசும் போது சரியான லைனில் பந்து வீச வேண்டும். அது இல்லையென்றால் பந்து மிக நீண்ட தூரம் செல்லும். அவரது ஆட்டம் மிகவும் ஈர்க்கக்கூடிய ஒன்றாக உள்ளது. அவரது ஆட்ட முறை எனக்கு பிடித்துள்ளது. தனது கிரிக்கெட் கரியரை சிறப்பாக தொடங்கி உள்ளார்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT