தைபே: தைபே ஓபன் பாட்மிண்டன் தொடர் தைபே சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சகநாட்டைச் சேர்ந்த தேவிகா ஷிகாக்கை எதிர்த்து விளையாடினார்.
இதில் உன்னதி ஹூடா 23-21, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தன்வி சர்மா 21-15, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் சுபனிடா கதேதாங்கை வீழ்த்தி அரை இறுதி சுற்றில் நுழைந்தார்.