விளையாட்டு

கடைசி 2 டி20 போட்​டி​யிலும் திலக் வர்மா விளையாடமாட்டார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் இடையே 5 ஆட்​டங்​கள் கொண்ட டி20 கிரிக்​கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் முதல் 3 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்ற இந்​திய அணி தொடரை 3-0 என தன்​வசப்​படுத்​தி​யது. 4-வது டி 20 போட்டி விசாகப்​பட்​டினத்​தில் நாளை​யும் (28-ம் தேதி), கடைசி மற்​றும் 5-வது போட்டி வரும் 31-ம் தேதி திருவனந்​த​புரத்​தி​லும் நடை​பெறுகிறது.

இந்​தத் தொடரின் முதல் 3 ஆட்​டங்​களி​லும் வயிற்று அறுவை சிகிச்சை காரண​மாக இந்​திய அணி​யின் முன்​னணி பேட்​ஸ்​மே​னான திலக் வர்மா வில​கி​யிருந்​தார். எனினும் கடைசி 2 ஆட்​டங்​களில் அவர், விளை​யாடு​வார் என தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

          

இந்​நிலை​யில் தற்​போது திலக் வர்​மா, பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் அறுவை சிகிச்​சைக்கு பிந்​தைய பயிற்​சிகளில் ஈடு​பட்​டுள்​ளார். போட்​டிகளில் விளை​யாடு​வதற்​கான முழு உடற்​தகு​தியை அவர், இன்னும் அடைய​வில்​லை. இதனால் நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான கடைசி 2 டி20 போட்​டிகளி​லும் திலக் வர்மா களமிறங்​க​மாட்​டார் எனவும் அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் அணி​யில் தொடர்​வார் எனவும் பிசிசிஐ தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT