விளையாட்டு

“இந்​தி​யா​வுக்கு பெருமையளிக்கும் தருணம் இது” - பி.டி.உஷா பாராட்டு

செய்திப்பிரிவு

கிளாஸ்கோ: கிளாஸ்​கோ​வில் நடை​பெறும் 23-வது ​காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்​திய வீரர், வீராங்​க​னை​களின் சிறந்த செயல்​பாடு​களால் இந்​தியா பெரு​மையடைய வேண்​டிய தரு​ணம் இது என்று இந்​திய ஒலிம்​பிக் சங்​கத்​தின் (ஐஓஏ) தலை​வர் பி.டி.உஷா பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து செய்​தி​யாளர்​களுக்கு அவர் அளித்த பேட்​டி: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்​திய வீரர், வீராங்​க​னை​கள் சிறப்​பாக தங்​களது திறன்​களை வெளிப்படுத்தி பதக்​கங்​களை வேட்​டை​யாடி​யுள்​ளனர். குறிப்​பாக குத்​துச்​சண்​டைப் போட்​டி​யில் 7 தங்​கம் உட்பட 10 பதக்​கங்​களைப் பெற்றுள்​ளனர்.

போட்​டி​யின்​போது தங்​கப் பதக்​கம் வென்று நமது நாட்டு தேசிய கீத​மான ‘ஜன கண மன’ இசைக்​கப்​படும்​போது, அது நம் நாட்டுக்கும், ஒவ்​வொரு இந்​தி​யருக்​கும் மற்​றும் அந்த குத்​துச்​சண்டை வீரருக்​கும் ஒரு பெரு​மைக்​குரிய தருண​மாக அமைகிறது.

இந்​தி​யாவே பெருமை அடை​யும் நேரம் இது​வாகும். இந்த உணர்வை ஒரே வார்த்​தை​யில் விவரிக்க முடி​யாது. கிளாஸ்கோ போட்​டி​யில் குத்​துச்​சண்டை வீரர்​கள் மிகச் சிறப்​பாகச் செயல்பட்டுள்​ளனர். கடைசி நிமிடம் வரை அவர்​கள் போராடுகின்​றனர். போட்​டி​யின் இடையே சோர்​வடைந்து விட்டுக்கொடுப்​ப​தில்​லை. ஏனெனில் அவர்​கள் மனதள​வில் மிகவும் வலிமை​யானவர்​களாக இருக்​கிறார்​கள்.

தடகள வீரர்​களும் பதக்​கங்​களை வென்​றது எனக்கு மிகுந்த மகிழ்ச்​சியை அளிக்​கிறது. நமது பிரதமர் மோடி, விளை​யாட்​டுத் துறைக்கு ஆதர​வளித்​து, வீரர்​களை ஊக்​கப்​படுத்​துகிறார். போட்டிகள் முடிந்த பிறகு, அவர் வீரர்​களைத் தனது இல்​லத்​துக்கு அழைத்து பாராட்​டு​கிறார். மத்​திய அரசும் இந்திய ஒலிம்பிக் சங்கமும் (ஐஓஏ) ஒரே நோக்​கத்​துடன் இணைந்து செயல்படுகின்றன. அதனால்​தான் இத்​தகைய சிறப்​பான செயல்பாடு​கள் போட்​டிகளில் வெளிப்​படு​கின்​றன. மிக விரை​வில்​ ​நாம்​ உலகத்​ தரத்​திலான நிலையை அடைவோம்​ என்​று நம்புகிறேன்​. இவ்​​வாறு பி.டி.உஷா தெரி​வித்​​தார்​.

SCROLL FOR NEXT