விளையாட்டு

தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதிரான டி 20 தொடர்: கில், பாண்​டியா இந்​திய அணிக்கு திரும்​பினர்

செய்திப்பிரிவு

ராய்ப்​பூர்: இந்​தியா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையே 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடர் நடை​பெற உள்​ளது. இதன் முதல் ஆட்​டம் வரும் டிசம்​பர் 9-ம் தேதி கட்​டாக்​கில் நடை​பெறுகிறது.

தொடர்ந்து 2-வது ஆட்​டம் 11-ம் தேதி சண்​டிகரிலும், 3-வது ஆட்​டம் 14-ம் தேதி தரம்​சாலா​விலும், 4-வது ஆட்​டம் 17-ம் தேதி லக்​னோ​விலும் கடைசி மற்​றும் 5-வது ஆட்​டம் 19-ம் தேதி அகம​தா​பாத்​தி​லும் நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டது.

கேப்​ட​னாக சூர்​யகு​மார் யாதவ் தொடர்​கிறார். ஆல்-​ர​வுண்​ட​ரான ஹர்​திக் பாண்​டி​யா, துணை கேப்​டன் ஷுப்​மன் கில் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்​ளனர். ஷுப்​மன் கில், கொல்​கத்தா டெஸ்ட் போட்​டி​யின் போது கழுத்து பகு​தி​யில் ஏற்​பட்ட சுளுக்கு காரணமாக தொடரில் இருந்து வில​கி​னார்.

தற்​போது நடை​பெற்று வரும் ஒரு​நாள் போட்​டித் தொடரிலும் அவர், பங்​கேற்​க​வில்​லை. காயத்​தில் இருந்து குணமடைந்​துள்ள நிலை​யில் ஷுப்​மன் கில் டி 20 அணி​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். அணி​யில் அவர், சேர்க்​கப்​பட்​டுள்ள போதி​லும், பிசிசிஐ சிறப்பு மையம் தகுதி சான்​றிதழ் வழங்​கி​னால் மட்​டுமே போட்​டி​யில் பங்கேற்க முடி​யும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

காலில் ஏற்​பட்ட காயம் காரண​மாக ஆசிய கோப்பை இறு​திப் போட்​டி​யில் இருந்து வில​கி​யிருந்த ஹர்​திக் பாண்​டியா அதன் பின்னர் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ராக நடை​பெற்ற டி 20 தொடரிலும் கலந்​து​கொள்​ள​வில்​லை. இந்​நிலை​யில் காயத்​தில் இருந்து மீண்​டுள்ள ஹர்​திக் பாண்​டியா தற்​போது சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் விளை​யாடி வரு​கிறார். உடற்தகுதியை நிரூபித்​துள்​ள​தால் தேசிய அணிக்கு திரும்பி உள்ளார்.

இந்​திய அணி: சூர்​யகு​மார் யாதவ் (கேப்​டன்), ஷுப்​மன் கில், அபிஷேக் சர்​மா, திலக் வர்​மா, ஹர்​திக் பாண்​டி​யா, ஷிவம் துபே, அக்​சர் படேல், ஜிதேஷ் சர்​மா, சஞ்சு சாம்​சன், வாஷிங்​டன் சுந்​தர், வருண் சக்​ர​வர்த்​தி, குல்​தீப் யாதவ், ஜஸ்​பிரீத் பும்​ரா, அர்​ஷ்தீப்​ சிங், ஹர்ஷித் ராணா.

SCROLL FOR NEXT