விளையாட்டு

பெனால்டி வாய்ப்பு சர்ச்சையுடன் ஆப்பிரிக்கா கோப்பையை வென்றது செனகல் அணி

செய்திப்பிரிவு

ரபாத்: ஆப்பிரிக்கா கோப்பை கால்​பந்து தொடரின் இறுதி போட்​டி​யில் நேற்று மொராக்கோ - செனகல் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​தின. இந்த ஆட்​டம் மொராக்​கோ​வின் ரபாத் நகரில் உள்ள பிரின்ஸ் மவுலே அப்​தெல்லா மைதானத்​தில் நடை​பெற்​றது. போட்​டியை காண்​ப​தற்​காக மைதானத்​தில் சுமார் 70 ஆயிரம் ரசிகர்​கள் திரண்டிருந்தனர்.

நிர்​ண​யிக்​கப்​பட்ட 90 நிமிடங்​களின் முடி​வில் இரு அணிகள் தரப்​பில் கோல் ஏதும் அடிக்​கப்​பட​வில்​லை. இதைத் தொடர்ந்து காயங்​களுக்கு இழப்​பீ​டாக 8 நிமிடங்கள் வழங்​கப்​பட்​டது. இதன் 2-வது நிமிடத்​தில் செனகல் அணி கோல் அடித்​தது. ஆனால் அது ஃபவுல் என அறிவிக்​கப்​பட்​டது. தொடர்ந்து 6-வது நிமிடத்​தில் கார்னரில் இருந்து அடிக்​கப்​பட்ட பந்தை பாக்ஸ் பகுதிக்குள் வைத்து தடுக்க முயன்ற போது செனகல் வீரர் எல் ஹாட்ஜி மாலிக் டியூஃப், மொராக்கோ வீர் பிரஹிம் தியாஸை தள்​ளி​விட்​டார்.

இதனால் மொராக்கோ அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்​கப்​பட்​டது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து செனகல் அணி வீரர்​கள் பயிற்​சி​யாளர் பபே தியாவ்​வுடன் மைதானத்​தில் இருந்து வெளி​யேறினர். முன்​ன​தாக இரு அணி​களின் பதிலி வீரர்​களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மொராக்கோ அணி​யின் பயிற்​சி​யாள​ரும் வாக்​கு​வாதத்தில் ஈடு​பட்​டார். அப்​போது மைதானத்​தின் கேலரிகளில் இருந்த செனகல் ரசிகர்​களின் ஒரு பகுதியினர் களத்​துக்​குள் நுழைய முயன்​றனர். அப்​போது ரசிகர் ஒரு​வர் நாற்​காலியை தூக்கி எறிந்​தார்.

இதையடுத்து காவல்​துறை​யினர் ரசிகர்​களை கட்​டுப்​படுத்​தினர். இதனால் மைதானத்​தில் பரபரப்பு ஏற்​பட்​டது. சுமார் 14 நிமிடங்​களுக்கு பிறகு செனகல் அணி வீரர்​கள் மீண்​டும் களத்​துக்​குள் வந்​தனர். அப்​போது பெனால்டி வாய்ப்​பில் மொராக்கோ வீரர் பிரஹிம் தியாஸ் அடித்த பந்து செனகல் கோல்​கீப்​பர் எட்​வார்ட் மெண்​டி​யின் கைகளுக்​குள் நேராக தஞ்​சம் அடைந்​தது.

இதனால் செனகல் அணி கோல் வாங்​கு​வ​தில் இருந்து தப்​பித்​தது. நிர்​ண​யிக்​கப்​பட்ட ஆட்ட நேரத்​தின் முடி​வில் இரு அணி​கள் தரப்​பில் கோல் ஏதும் அடிக்​கப்​ப​டாத​தால் வெற்றியை தீர்​மானிக்க கூடு​தல் நேரம் வழங்​கப்​பட்​டது. இதில் 94-வது நிமிடத்​தில் செனகல் அணி​யின் வீரர் பேப்குயே கோல் அடித்து அசத்​தி​னார்.

மொராக்கோ அணி கடைசி வரை போராடிய போதி​லும் பதில் கோல் அடிக்க முடி​யாமல் போனது. முடி​வில் செனகல் அணி 1-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டம் வென்றது. செனகல் அணி ஆப்​பிரிக்கா கோப்​பையை வெல்​வது இது 2-வது முறை​யாகும். அந்​த அணி கடந்​த 2021-ம்​ ஆண்​டும்​ பட்​டம்​ வென்​றிருந்​தது.

SCROLL FOR NEXT