ஜெய்ப்பூர்: இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான சாம் கரண், இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வரவிருக்கும் ஐபிஎல் தொடரிலிருந்து விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த இங்கிலாந்து அணியில் சாம் கரண் இடம் பெற்றிருந்தார். கடந்த சீசனில் ஐபிஎல் தொடரில் சாம் கரண் சிஎஸ்கே அணிக்காக விளையாடி இருந்தார்.
இதைத் தொடர்ந்து டிரேடிங் முறையில் 2026-ம் ஆண்டு சீசனுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியிருந்தது. தற்போது அவர், காயத்ததால் அவதிப்பட்டு வருவதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவருக்குப் பதிலாக மாற்று வீரரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 2026-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 30-ம் தேதி 5 முறை சாம்பியனான சிஎஸ்கேவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் குவாஹாட்டியில் நடைபெறுகிறது.