விளையாட்டு

தேசிய கூடைப்​பந்​தில் ரயில்வே அணி​கள் சாம்​பியன்

செய்திப்பிரிவு

சென்னை: 75-வது சீனியர் தேசிய கூடைப்​பந்து சாம்பியன்ஷிப் சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்கில் நடை​பெற்​றது. இதில் ஆடவர் இறு​திப் போட்டியில் நேற்று தமிழ்நாடு - இந்​தி​யன் ரயில்வே அணிகள் மோதின. இந்த ஆட்​டத்​தில் இந்​தி​யன் ரயில்வே அணி 77-69 என்ற புள்​ளி​கள் கணக்​கில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டம் வென்​றது.

இந்​தி​யன் ரயில்வே அணி சார்​பில் அரவிந்​தர் சிங் 18 புள்​ளி​களை சேர்த்​தார். கன்​வார் குர்​பாஸ் சிங் சாந்​து, சஹாய்ஜ் பிர​தாப் சிங் செகோன் ஆகியோர் தலா 14 புள்​ளி​களை எடுத்​தனர். மகளிர் பிரி​விலும் இந்​தி​யன் ரயில்வே அணி சாம்​பியன் பட்​டம் வென்​றது. அந்த அணி இறு​திப் போட்​டி​யில் 75-66 என்ற புள்​ளி​கள் கணக்​கில் கேரளாவை வீழ்த்தியது.

SCROLL FOR NEXT