கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முன்னேறியுள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற 2-வது சுற்றுப் போட்டியில் முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்து 21-8, 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பான் வீராங்கனை டொமாகோ மியாசாக்கியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி 21-13, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபேவின் யாங் போ சுவான், லீ ஜே ஹுவே ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.