விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது நவாஸுக்கு தடை

செய்திப்பிரிவு

துபாய்: டி20 உலகக் கோப்பை தொடரில் ஊக்க மருந்து பயன்படுத்திய பாகிஸ்தான் அணி​யின் சுழற்​பந்து வீச்சு ஆல் ரவுண்டர் முகமது நவாஸுக்கு 3 மாதம் தடை விதித்​துள்​ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்​சில் (ஐசிசி).

இந்த ஆண்​டின் தொடக்​கத்​தில் நடை​பெற்ற டி 20 உலகக்​ கோப்பை​யில் பிப்​ர​வரி 7-ல் நெதர்​லாந்​துக்கு எதி​ரான போட்டிக்குப் பிறகு முகமது நவாஸுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர், தடை செய்​யப்​பட்ட கார்​பாக்​ஸி-டிஹெச்சி என்ற ஊக்க மருந்து பயன்​படுத்​தி​யது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவருக்கு 3 மாதம் தடை விதித்​துள்​ளது ஐசிசி. இதை முகமது நவாஸ் ஏற்​றுக்​கொண்​டுள்​ளார். மேலும் அவர், ஊக்கமருந்து தடுப்பு மறு​வாழ்வு திட்​டத்தை வெற்​றிகர​மாக முடித்​தவுடன் இந்​தத் தண்​டனைக்​காலம் ஒரு மாத​மாகக் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அவரது தகுதி நீக்​கக் காலம் மே 1 முதல் முன்​தே​தி​யிட்டு அமல்​படுத்​தப்​படுகிறது. மே 1 முதல், முகமது நவாஸ் செய்த அனைத்து சாதனைகளும் தகுதி நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக​வும் ஐசிசி அறி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT