விளையாட்டு

வழக்கை திரும்பப் பெற்றார் துஷாரா

செய்திப்பிரிவு

கொழும்பு: வேகப்​பந்து வீச்​சாளர் நூவன் துஷாரா, ஐபிஎல் தொடரில் விளை​யாடு​வதற்​கான தடை​யில்லா சான்றிதழை வழங்​காததற்​காக இலங்கை கிரிக்​கெட் வாரி​யத்​துக்கு எதி​ராகத் தொடர்ந்த வழக்​கைத் திரும்​பப் பெற்​றுள்​ளார்.

இலங்கை கிரிக்​கெட் அணி​யின் வேகப்​பந்து வீச்​சாள​ரான நூவன் துஷா​ராவை ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்​பிய​னான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி ஒப்​பந்​தம் செய்​திருந்​தது. ஆனால் அவர், உடற்​தகு​தித் தேர்​வு​களில் தேர்ச்சி பெறாத​தால் ஐபிஎல் தொடரில் பங்​கேற்​ப​தற்​கான தடை​யில்லா சான்​றிதழை வழங்க இலங்கை கிரிக்​கெட் வாரி​யம் மறுத்​தது.

இதை எதிர்த்து நூவன் துஷாரா கொழும்பு மாவட்ட நீதின்றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இதுதொடர்​பான விசா​ரணை​யின் போது நூவன் துஷா​ரா​வின் வழக்​கறிஞர், ஐபிஎல் தொடரின் பெரும்​பாலான போட்​டிகள் ஏற்​கெனவே முடிவடைந்​து​விட்​ட​தால் வழக்​கைத் திரும்​பப் பெற விரும்​புவ​தாகத் தெரி​வித்​தார். இதனை நீதி​மன்​ற​மும் ஏற்​றுக்​கொண்​டது. இதன் மூலம் துஷாரா மற்​றும் இலங்கை கிரிக்​கெட் வாரி​யத்​துக்கு இடையி​லான மோதல் முடிவுக்​கு வந்​துள்​ளது.

SCROLL FOR NEXT