விளையாட்டு

தேசிய கால்பந்து போட்டி: புதுச்சேரியை வென்றது தமிழ்நாடு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 79-வது தேசிய கால்​பந்து போட்​டி​யில் தமிழ்​நாடு அணி சிறப்​பாக விளை​யாடி புதுச்​சேரியை தோற்​கடித்​தது.

2025- 26ம் ஆண்​டுக்​கான சந்​தோஷ் கோப்​பைக்​கான 79-வது தேசிய கால்​பந்து சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் தமிழ்​நாடு அணி தனது 3-வது ஆட்​டத்​தில் நேற்று புதுச்​சேரி​யுடன் மோதி​யது. ஆந்​திர மாநிலம் அனந்த்​பூரில் உள்ள ஆர்​டிடி மைதானத்​தில் இப்போட்டி நடை​பெற்​றது. இதில் தமிழ்​நாடு அணி 3-0 என்ற கோல் கணக்​கில் அபார​மான வெற்​றியை ருசித்​தது.

தமிழக அணி சார்​பில் 40-வது நிமிடத்​தில் எஸ்​.தேவதத் ஒரு கோலடித்​தார். இதைத் தொடர்ந்து 68-வது நிமிடத்​தில் தமிழக வீரர் அலெக்​சாண்​டர் ரொமாரியோ ஜேசு​தாஸ் மேலும் ஒரு கோலடித்தார். ஆட்​டம் முடிய சில நிமிடங்​கள் இருந்​த​போது தமிழக வீரர் எஸ்​.பிரகதீஸ்​வரன் ஒரு கோலடித்​தார்.

இதையடுத்து தமிழக அணி 3-0 என்ற கோல்​கள் கணக்​கில் முன்னிலை பெற்றது. 86-வது நிமிடத்​தில் இந்த கோலை தமிழக வீரர் பிரகதீஸ்​வரன் அடித்​தார். இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே தமிழக அணி 3-0 என்ற கோல் கணக்​கில் புதுச்​சேரி அணியை வீழ்​த்​தியது.

SCROLL FOR NEXT